Loading...
வந்தே மாதரம் பாடலுடன் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது
மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

வந்தே மாதரம் பாடலுடன் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
12:53 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் கூச்சலுக்கு இடையே வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) தேதி குறிப்பிடப்படாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, அவை காலையில் கூடியதும் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா அவையை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். வழக்கமாக நடைபெறும் கூட்டத்தொடரின் செயல்பாடுகள் குறித்த நிறைவுரையை அவர் இந்த முறை வாசிக்கவில்லை.

பிரதமர் வருகை

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியும் பிரதமர் வருகையும்

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தொடரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நிதி முறைக்கேடு மற்றும் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தடியடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பின.

வியாழக்கிழமையன்றும் அவை கூடிய குறுகிய நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசிற்கு எதிராகக் கோஷமிட்டனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவையில் இருந்தனர்.

மசோதாக்கள்

விவாதங்கள் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றம்

கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும், அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால் அவையின் நடவடிக்கைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.

இந்த அமளிக்கு மத்தியிலேயே அரசு பல முக்கிய சட்ட மசோதாக்களை விவாதங்களின்றி அவையில் நிறைவேற்றியது.

மாணவர்கள் போராட்டம் குறித்துப் பேச எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அவையின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சரின் விளக்கம் மற்றும் முடிவு

மாணவர்கள் விவகாரம் குறித்துப் பேசத் தயார் என்றும், எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்திருந்தார்.

இதற்காக சபாநாயகர் நேர ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படாத நிலையில், மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT