NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
    இந்தியா

    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை

    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2023, 03:57 pm 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்கர்களின் பார்வை இழப்புக்கு காரணாமாக இருந்த சென்னை நிறுவனத்தில் இரவோடு இரவாக சோதனை
    சர்ச்சைக்குள்ளான எஸ்ரிகேர் செயற்கை கண்ணீர் லூப்ரிகண்ட் சொட்டுமருந்து

    சென்னையைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் கண் மருந்துகளால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்பட்டதாக, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள்(CDC) குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து, நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் மற்றும் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்கள், மேற்கண்ட நிறுவனத்தில் நேற்று(பிப் 3) நள்ளிரவு சோதனை நடத்தினர். 55 அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய மருந்துகளைத் தயாரித்த இந்த மருந்து நிறுவனம், சென்னைக்கு தெற்கே சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் எஸ்ரிகேர் என்ற சொட்டுமருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளை அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, இந்த நிறுவனம், அமெரிக்க சந்தைகளில் இருக்கும் அதன் கண் மருந்துகளை தானாக முன் வந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக நேற்று அறிவித்தது.

    இரவு 2 மணி வரை நடந்த விசாரணை

    "அமெரிக்காவிற்கு அனுப்பிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து வரும் திறக்கப்படாத மாதிரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கான முதற்கட்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டாளர் டாக்டர் பி.வி.விஜயலட்சுமி NDTVஇடம் கூறியுள்ளார். அதிகாலை 2 மணிக்கு விசாரணை முடிவடைந்தது. இப்போதைக்கு கண் மருந்து தயாரிப்பை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நிறுவனத்தின் ஆலைக்கு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான உரிமம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என்று விஜயலட்சுமி தெரிவித்திருக்கிறார். இந்த மருந்துகளால், இதுவரை அமெரிக்காவில் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 11 பேர் பார்வை இழந்துள்ளனர் என்றும் 1 உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் CDC தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    அமெரிக்கா
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    அமெரிக்கா

    சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை வட கொரியா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா இந்தியா
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா

    சென்னை

    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை
    தங்கம் விலை இன்று ரூ.160 வரை உயர்வு - இன்றைய நாளின் முழு விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023