Page Loader
கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்
மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு

கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு; சேவைகளை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளனர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 20, 2024
08:04 am

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். வரும் செப்டம்பர் 21 முதல் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதக்கவும் அறிவித்துள்ளனர். 41 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டனர். கொல்கத்தா கற்பழிப்பு கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ விரைவுபடுத்த வலியுறுத்தி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஸ்வஸ்த்யா பவனில் இருந்து சிபிஐ அலுவலகம் வரை மருத்துவர்கள் பேரணி நடத்த உள்ளனர்.

பேச்சுவார்த்தை

மேற்குவங்க அரசுடன் பேச்சுவார்த்தை

மேற்கு வங்க அரசுடன் அவர்கள் நடத்திய விவாதங்களின் முக்கிய புள்ளிகளை கோடிட்டுக் காட்டும் வரைவை அவர்கள் தலைமைச் செயலாளர் மனோஜ் பந்திடம் வியாழக்கிழமை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் இப்போது தங்கள் முன்மொழிவுகளுக்கு அரசின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள். பந்த் தலைமையிலான மாநில பொது சுகாதாரப் பணிக்குழு மற்றும் 30 இளநிலை மருத்துவர்கள் கொண்ட குழுவிற்கும் இடையேயான இரண்டாவது சுற்று சந்திப்பு மாநில செயலகத்தில், நபன்னாவில் நடந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தை முதல்வர் மம்தா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற ஜூனியர் டாக்டர்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.