NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் 
    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்

    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Dec 11, 2023
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை புளியந்தோப்பு பகுதியினை சேர்ந்தோர் மசூத்-சௌமியா தம்பதி.

    கடந்த 5ம் தேதி சௌமியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    மழை, வெள்ளம் காரணமாக ஆம்புலன்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    நெடுநேர காத்திருப்பிற்கு பிறகு சௌமியா அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    ஆனால் அந்த மருத்துவமனை மூடப்பட்டிருந்தது.

    பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு மின்சாரம் இல்லாததால் சிகிச்சையளிக்க முடியவில்லை.

    பின்னர் படகு மூலம் சௌமியா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது, சௌமியாவிற்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குழந்தையின் உடலை முறையாக துணியினை சுற்றி கொடுக்காமல் மருத்துவமனை பிணவறை ஊழியர்கள், அட்டை பெட்டியில் வைத்து குழந்தையின் தந்தையிடம் கொடுத்துள்ளனர்.

    விசாரணை 

    3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது

    இதனிடையே, அட்டைப்பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையின் உடலை அவரது தந்தை எடுத்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

    இதனை கண்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இறந்த குழந்தையின் உடலை ஒப்படைக்க ரூ.2,500 லஞ்சமாக கேட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    எனவே, இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    அரசு மருத்துவமனை
    வெள்ளம்

    சமீபத்திய

    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு
    பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    கோடிங் எழுத ஏஐ இருக்க பொறியாளர்கள் எதற்கு? 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் மைக்ரோசாஃப்ட்
    இந்தியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஐ எட்டியுள்ளது இந்தியா

    சென்னை

    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது  கனமழை
    மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு உணவு பொட்டலங்களை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார் செங்கல்பட்டு
    சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு விஷ்ணு விஷால்

    அரசு மருத்துவமனை

    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    கோவை மாவட்டம் வால்பாறை அரசு பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு வாந்தி, மயக்கம்  கோவை

    வெள்ளம்

    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025