NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை
    கேரள ரயில் தீ விபத்தை பயங்கரவாத கோணத்தில் என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 04, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள ரயில் தீ விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தியது.

    கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் ஒருவர் வேண்டுமென்றே பயணிகளை தீ வைத்து எரித்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை பயங்கரவாத எதிர்ப்புப் படையுடன்(ATS) இணைந்து, NIA பயங்கரவாத கோணத்தில் விசாரித்து வருகிறது.

    இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பிற மாநிலங்களில் நடந்திருக்கும் நிலையில், கேரள ரயில் தீ விபத்து மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த கோவை மற்றும் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

    கேரளா

    முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக பார்க்கப்படும் ஷாரூக் சைஃபி

    இரண்டு குண்டுவெடிப்பு சந்தேக நபர்களும் செப்டம்பர் 2022 இல் கேரளாவில் இருந்ததால், இரண்டு சம்பவங்களும் கேரளாவுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    கோழிக்கோடு ரயில் தீ விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரூக் சைஃபியைப் பிடிக்க ரயில்வே காவல்துறையும் NIAவும் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் இன்று சோதனை நடத்தினர்.

    ஷாரூக் சைஃபியைப் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்று பின் விடுவித்தனர்.

    மேலும், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஷாரூக் சைஃபி முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.

    ஏப்ரல் 2 ஆம் தேதி, கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது சைஃபி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் தமிழ்நாடு
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025