NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    01:02 pm
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு
    ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு, எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சக பயணியை ஒருவர் தீ வைத்து எரித்ததில் 8 பேர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ரயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூவரும், தீ விபத்திற்குப் பிறகு ரயிலில் இருந்து குதித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2/2

    பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார்

    திடீரென்று இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டதால், பயணிகள் அவசர சங்கிலியை இழுத்தது ரயிலை நிறுத்தி இருக்கின்றனர். அந்த சந்தர்ப்பதை பயன்படுத்தி கொண்ட அடையாளம் காணப்படாத சந்தேக நபர் தப்பிச் சென்றார். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்த மற்ற பயணிகள் தீயை அணைத்தனர். பின், இச்சம்பவத்தில் தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேக நபர் விட்டு சென்ற பையில் இருந்து இந்தி மற்றும் ஆங்கில குறிப்புக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த குறிப்புகள் இருந்த டைரியில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது பீதியை கிளப்பி இருக்கிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    கேரளா
    காவல்துறை
    காவல்துறை
    தெற்கு ரயில்வே

    இந்தியா

    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தோல்வி இந்திய அணி
    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு டெல்லி
    ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆப்பிள் நிறுவனம்
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து இந்திய அணி

    கேரளா

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமானம்
    கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா கோவில் திருவிழாக்கள்
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு

    காவல்துறை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு

    காவல்துறை

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை

    தெற்கு ரயில்வே

    12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு! இந்திய ரயில்வே
    ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா? இந்திய ரயில்வே
    மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல் இந்திய ரயில்வே
    நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன? வந்தே பாரத்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023