NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது
    ரயில் தீயில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    கேரள ரயில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான குற்றவாளியை மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையின்(ATS) கூட்டுக் குழு இன்று(ஏப் 5) கைது செய்தது.

    "கேரள காவல்துறையின் குழுவும் ரத்னகிரிக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்" என்று மகாராஷ்டிர ATS அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நேற்று, கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் ரயிலின் பெட்டிகளை தேசிய புலனாய்வு முகமை(NIA) ஆய்வு செய்தது.

    கடந்த ஞாயிற்றுகிழமை, கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் ஒருவர் வேண்டுமென்றே பயணிகள் மீது தீ வைத்ததில், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    இந்தியா

    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரிபொருளை தெளித்து ரயிலுக்கு தீ வைத்திருக்கிறார்

    கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் டி1 பெட்டிக்குள் சந்தேக நபர், ஒரு பயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

    சந்தேக நபரின் ஓவியத்தை கேரள போலீசார் தயாரித்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரசாக் என்பவரின் உதவியுடன் கோழிக்கோட்டில் உள்ள இலத்தூர் காவல் நிலையத்தில் வரைபடம் தயாரிக்கப்பட்டது.

    மூன்று பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், ஐந்து பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் குறைந்தது மூன்று பேர் பெண்கள் ஆவர்.

    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற எரிபொருளை தெளித்து ரயிலுக்கு தீ வைத்ததாக காயமடைந்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025