Page Loader
2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து கேரள சட்டசபையில் இடைக்கால அமைச்சரவை மாற்றம்

2 அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து கேரள சட்டசபையில் இடைக்கால அமைச்சரவை மாற்றம்

எழுதியவர் Sindhuja SM
Dec 24, 2023
01:12 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் ஆகியோர் முதல்வர் பினராயி விஜயனிடம் இன்று தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர். அவர்களது ராஜினாமா இடைக்கால அமைச்சரவை மாற்றத்துக்கு வழி வகுத்ததுள்ளது. அவர்களுக்குப் பதிலாக கேபி கணேஷ் குமார் மற்றும் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டிசம்பர் 29ஆம் தேதி புதிய அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர். தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆண்டனி ராஜு, 2016இல் பினராயி விஜயன் அரசாங்கம் பதவியேற்றத்தில் இருந்து முக்கியமான போக்குவரத்து துறை இலாக்காவை நிர்வகித்து வந்தார்.

டக்லக்ஜ்வ்க்

கேரள சட்டசபையில் அமைச்சரவை மாற்றம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கியத் தலைவரான அகமது தேவர்கோவில், 2021ஆம் ஆண்டு முதல் துறைமுக அமைச்சராக இருந்து வந்தார். அவர்களது ராஜினாமாக்கள் டிசம்பர் 29-ம் தேதி அமலுக்கு வரும். அவர்களுக்குப் பதிலாக கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் அதே தேதியில் புதிய அமைச்சர்களாக பதவியேற்பார்கள். கேரள காங்கிரஸின்(பி) பிரபல தலைவரான கே.பி.கணேஷ் குமார், போக்குவரத்து இலாகாவை நிர்வகிப்பார். அதே நேரத்தில் மூத்த காங்கிரஸ்(எஸ்) தலைவரான ராமச்சந்திரன் துறைமுகங்கள், அருங்காட்சியகம், தொல்லியல் மற்றும் ஆவணக் காப்பகத் துறைகளுக்குத் தலைமை தாங்குவார்.