NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி
    ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியர் நிமிஷா பிரியா

    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கொலை வழக்கில் ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷாவின் தாய், தற்போது தனது மகளை காப்பாற்ற இருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்த ஏமன் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    நேற்று மாலை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் அந்த தாய் ஏமனுக்குச் சென்று, தனது மகள் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற "இரத்த பணம்" (BLOOD MONEY) பேரம் பேசுவதற்கு அனுமதித்தது.

    "இரத்தப் பணம்" என்பது யேமனில் நடைமுறையில் உள்ள ஷரியா சட்டத்தின்படி நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தால் அவரது விடுதலைக்காகத் தரக்கூடிய இழப்பீடு ஆகும்.

    ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு, அவரது தாயார் ஏமன் பயணம் செய்வது முக்கியம்.

    card 2 

    ஏமனில் உள்ள இந்திய தூதரகம் செயல்பாட்டில் இல்லை

    ஏமனுக்கு இந்திய பிரஜைகள் செல்ல கடந்த 2017 ஆண்டு முதல் தடை விதித்துள்ளது மத்திய அரசு.

    அங்கே நிலவி வரும் அசாத்தியமான சூழலால் இந்த தடை தற்போதும் அமலில் உள்ளது.

    அதனால், அரசாங்கத்தின் அனுமதியின்றி இந்திய குடிமக்கள் ஏமன் செல்ல முடியாது. இந்த வழக்கில், மத்திய அரசின் தடையை தளர்த்த முடியுமா என நீதிமன்றம் கேட்டதற்கு, ஏமனுடன் இந்தியா தூதரக உறவுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், அங்குள்ள தூதரகத்தை மூடிவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அந்த நாட்டில் சர்வதேச ஒப்பந்தம் எதுவும் பொருந்தாது என்றும் கூறியுள்ளது.

    இதனை தொடர்ந்து, இந்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும் இன்றி, தனது சொந்தப் பொறுப்பில் பயணம் மேற்கொள்வதாக, பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்குமாறு நிமிஷாவின் தாயாரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    card 3

    ஏமன் நாட்டவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றுள்ளார் நிமிஷா 

    ஏற்கனவே திருமணம் ஆன செவிலியர் நிமிஷா பிரியா, ஏமன் நாட்டில் மருத்துமனை தொடங்க, அந்நாட்டவரை திருமணம் செய்ததாக பொய் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார்.

    அதற்கு உதவியாக இருந்த அப்தோ மஹ்தி, பின்னர் அதை காரணமாக வைத்தே நிமிஷாவிற்கு தொல்லை கொடுத்து வரவே, அவரிடம் உள்ள தனது பாஸ்போர்ட்டை மீட்டெடுக்கும் முயற்சியில், தலால் அப்தோ மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி அவரை கொலை செய்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, 2018 முதல் சிறையில் உள்ளார்.

    ஏமேனி உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததால், இரு குடும்பங்களுக்கு இடையேயான "இரத்த பணம்" சமரச ஒப்பந்தம் மட்டுமே அவருக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    மரண தண்டனை
    கொலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஈரான்

    மரண தண்டனை

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கத்தார்
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை

    கொலை

    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  காவல்துறை
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு தூத்துக்குடி
    சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு  கனடா
    மணிப்பூர்: காணாமல் போன 2 மெய்டே மாணவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025