துபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்
துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மஹ்சூஸ் லாட்டரி குலுக்கலில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜு(39)என்பவர் 20,000,000-மில்லியன் திர்ஹம்களை வென்றுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பிற்கு ரூ.45 கோடி ரூபாயாகும். இத்தொகையினை வென்றுள்ள ஸ்ரீஜு துபாயிலிருந்து 120 கிமீ.,தொலைவிலுள்ள ஃபுஜைரா என்னும் பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மேலும் இவர் அங்குள்ள எண்ணெய் மற்றும் வருவாய்துறை கட்டுப்பாட்டு அறையில் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறாராம். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், தனக்கு கிடைத்த பரிசுத்தொகையின் ஓர்பகுதியை வைத்து இந்தியாவில் சொந்தமாக ஓர் வீட்டை வாங்க திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.