NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்
    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்

    ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசியதற்கு காரணம் NEET தேர்வு: 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 31, 2023
    10:13 am

    செய்தி முன்னோட்டம்

    ஆளுநர் மாளிகை முன்பு, சென்ற வாரம், 'கருக்கா' வினோத் என்ற நபர், பெட்ரோல் குண்டு வீசினார்.

    இவர் மாளிகையில் முதன்மை வாயில் நோக்கி இரண்டு குண்டுகள் வீசிய நிலையில், போலீசார் அவரை மடக்கி பிடித்து, தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    அவரிடம் முதல்கட்ட விசாரணை நடைபெற்றுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை உயரதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த நிலையில், இன்று 'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் அவர், தான் சிறையில் இருந்த சமயத்தில், நீட் தேர்வு தொடர்பான தற்கொலை செய்திகளை படித்ததில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    card 2

    மகனின் மருத்துவ கனவு பலிக்காமல் போய்விடும் என அஞ்சியே குண்டு வீசியதாக வாக்குமூலம்

    'கருக்கா' வினோத் தன்னுடைய வாக்குமூலத்தில், தன்னுடைய மகன் தற்போது ஆறாவது படிப்பதாகவும், அவனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், தற்போது நடைமுறையில் நீட் தேர்வு இருப்பதால், மகனால் மருத்துவம் படிக்கமுடியாமல் போய்விடும் என அஞ்சியே குண்டு வீசியதாக கூறியுள்ளார்.

    கவர்னர் ரவியிடம், NEET தேர்வு ரத்து செய்யவேண்டும் என ஆளும் கட்சி சார்பில் மனுக்கள் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதோடு, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைபட்டு உள்ளவர்களை விடுவிக்க கோரும் மனுவிற்கு கவர்னர் கையெழுத்திட வேண்டும் என மிரட்டல் விடவே, இந்த குண்டுகளை வீசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், சிறையில், தான் எந்த பிரிவினைவாத குழுவையும் சந்திக்கவில்லை எனவும், இது தன்னுடைய சொந்த முடிவு எனவும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    'கருக்கா' வினோத்தின் வாக்குமூலம்

    #BREAKING || ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? - போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு

    "சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டது "

    "ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில்… pic.twitter.com/W7EXI1fgnR

    — Thanthi TV (@ThanthiTV) October 31, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆளுநர் மாளிகை
    குண்டு எறிதல்
    குண்டுவெடிப்பு
    புழல் சிறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆளுநர் மாளிகை

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் தமிழ்நாடு
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு

    குண்டு எறிதல்

    மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் இந்தியா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் ஆசிய விளையாட்டுப் போட்டி
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல் கேரளா

    புழல் சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்படாத செந்தில் பாலாஜி - புதிய சர்ச்சை செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025