NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்

    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் போட்டோஷூட் நடத்திய ஆசிரியை சஸ்பெண்ட்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 30, 2023
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    10ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத முறையில் புகைப்படம் எடுத்த கர்நாடக ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    புஷ்பலதா ஆர் என்ற ஆசிரியை கர்நாடகாவில் உள்ள முருகமல்ல கிராம அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆவார்.

    இவர் சிக்கபள்ளாப்பூரில் நடந்த ஆய்வுச் சுற்றுலாவின் போது, 10ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் கட்டி பிடிப்பது போலவும் முத்தம் கொடுப்பது போலவும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது.

    இதனையடுத்து, தலைமை ஆசிரியையான புஷ்பலதாவை பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

    டிஜிவ்க்ன்

     புஷ்பலதாவுக்கு எதிராக புகார் அளித்த மாணவனின் பெற்றோர்

    இதனால் ஆத்திரமடைந்த அந்த 10-ம் வகுப்பு மாணவனின் பெற்றோர், அந்த ஆசிரியையின் நடத்தை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொகுதி கல்வி அதிகாரியிடம் (பிஇஓ) புகார் அளித்தனர்.

    புகாரை பெற்றுக்கொண்ட பிஇஓ உமாதேவி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து ஆசிரியை புஷ்பலதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    பிஇஓ அறிக்கையின் அடிப்படையில் சிக்கபள்ளாப்பூர் மாவட்ட கல்வித் துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.

    அதன்பிறகு, தலைமை ஆசிரியை புஷ்பலதா சஸ்பெண்ட் செய்து பொதுக் கல்வித்துறை இணை இயக்குனர்(டிடிபிஐ) பைலாஞ்சினப்பா உத்தரவு பிறப்பித்தார்.

    அந்த தகாத போட்டோஷூட் குறித்து தலைமை ஆசிரியை புஷ்பலதாவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் அந்த மாணவருடன் பகிர்ந்து கொண்டது "தாய்-மகன் உறவு" போன்றது என்று கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலான போட்டோஷூட் புகைப்படங்கள் 

    Where are we heading as a society ?

    Pictures and videos from a romantic photoshoot of a government school teacher with a Class 10 student in Karnataka's Murugamalla Chikkaballapur district, went viral, following which the student's parents filed complaint with the Block… pic.twitter.com/WviIHtOP3J

    — Amit Singh Rajawat (@satya_AmitSingh) December 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    கல்வி

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    கர்நாடகா

    காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  தமிழ்நாடு
    அத்திப்பள்ளி பட்டாசு வெடிப்பு வழக்கு சிஐடிக்கு மாற்றம்- கர்நாடக முதல்வர் சித்தராமையா தகவல் சித்தராமையா
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி
    இனிப்பான மங்களூர் பன் சாப்பிட்டதுண்டா? இதோ ரெசிபி சமையல் குறிப்பு

    கல்வி

    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் இந்தியா
    பாம்பே ஐஐடி-க்கு ரூ.315 கோடி நன்கொடை அளித்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர்  ஐஐடி
    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025