NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல் 

    கர்நாடகா: 3 பேரை கடத்தி அவர்களது அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்திய கும்பல் 

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2024
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் 3 பழைய கார் டீலர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பயங்கரமான நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடத்தி செல்லப்பட்டவர்களை நிர்வாணமாக்கி அவர்களின் அந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி ஷாக் கொடுப்பதை அந்த வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

    இந்த கொடூர குற்றத்தில் தொடர்புடைய ஏழு பேரை கர்நாடக போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர்கள் இம்ரான் படேல், ஸ்டீல் மாதீன் என்ற முகம்மது மதீன், முகமது ஜியா உல் ஹுசைன், முகமது அப்சல் ஷேக், உசேன் ஷேக், ரமேஷ் மற்றும் சாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இந்தியா 

    பணம் கேட்டு சித்தரவதை செய்த கும்பல் 

    போலீஸ் அறிக்கையின்படி, இவர்கள் ஒரு பெரிய கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

    அந்தக் கும்பலில் மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் கலபுர்கியில் உள்ள விஸ்வவித்யாலயா காவல் நிலையத்தில் மே 5ஆம் தேதி இரவு 9:30 மணியளவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தனர்.

    கடந்த மே மாதம் 4ஆம் தேதி செகண்ட் ஹேண்ட் காரை சோதனை செய்வதாக கூறி தாங்கள் கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் அவர்கள்ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் சிறைபிடிக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களை தடிகளால் அடித்த ஒரு கும்பல், அவர்களிடம் பணம் கேட்டு அவர்களை சித்தரவதை செய்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா

    சமீபத்திய

    அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு அமெரிக்கா
    நார்வே செஸ் 2025: கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ் டி.குகேஷ்
    இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி இயக்குனர்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsபிபிகேஎஸ்: இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐபிஎல் 2025

    கர்நாடகா

    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கைது
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை தமிழ்நாடு
    ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு காங்கிரஸ்
    ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்  சித்தராமையா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025