NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?
    இந்த போரில் 527 இந்திய வீரர்களும் 453 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

    கார்கில் வெற்றி தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2023
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கார்கில் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.

    1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    பொதுவாக, கார்கில் போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்திற்கு இன்று அஞ்சலி செலுத்தப்படும்.

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள்(LOC) பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியதை அடுத்து, கார்கில் போர் தொடங்கியது.

    இந்த போரில் 527 இந்திய வீரர்களும் 453 பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

    அதன் பிறகு, ஜூலை 26, 1999அன்று, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்து பாகிஸ்தான் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்தியா இந்த போரில் வெற்றி பெற்றது.

    பிகு

    இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சலி

    கார்கில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி, கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

    "இந்தியாவின் இணையற்ற வீரர்களின் துணிச்சலை நினைவுப்படுத்தும் கார்கில் விஜய் திவாஸ், எப்போதும் நாட்டின் மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    மேலும், இன்று கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 1999ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    "தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்தையும் தியாகம் செய்த அந்த துணிச்சலான மகன்களை நான் வணங்குகிறேன்." என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 49 புதிய பாதிப்புகள் கொரோனா
    6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்  ராஜஸ்தான்
    நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம் நீட் தேர்வு
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  நீலகிரி

    பாகிஸ்தான்

    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை இந்தியா
    கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் மேலும் உயரும்: நிபுணர்கள் இந்தியா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025