NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி 
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி

    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி 

    எழுதியவர் Nivetha P
    May 01, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

    இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25) அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்மநபர்கள் அங்கு வந்துள்ளனர்.

    திடீரென அவர்கள் லூர்துபிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    அவர் தப்பிக்க முயன்றநிலையில் அவரைச்சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

    இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இவரை கொன்றவர்களுள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை

    மணல் திருட்டினை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி உறுதி 

    இந்நிலையில் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி, அந்த ரூ.1 கோடிக்கான காசோலையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி லூர்து பிரான்சிஸ் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

    அதன் பின் பேசிய அவர், இந்த கொலையினை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று ஆட்சியரிடம் பரிந்துரைத்துள்ளேன் என்று கூறினார்.

    மேலும் மணல் திருட்டினை முழுமையாக ஒழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    மு.க ஸ்டாலின்
    கனிமொழி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் கமல்ஹாசன்
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளம்
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது தமிழ்நாடு

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025