NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு 
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு

    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராமநிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.

    இவர் வழக்கம் போல் நேற்று(ஏப்ரல்.,25)அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருக்கையில், 2 மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.

    திடீரென அவர்கள் லூர்துபிரான்சிஸை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    அவர் தப்பிக்க முயன்ற நிலையில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்துச்சென்றனர்.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் லூர்துபிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்திற்கு மாவட்டச்சூப்பிரண்ட், தாசில்தார் மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

    கொலை

    தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு 

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 3மாதங்களுக்கு முன்னர், முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் லூர்து ரோந்து சென்றுள்ளார்.

    அப்போது அங்கு சிலர் மணல் அள்ளி இருசக்கரவாகனத்தில் ஏற்றியதை கண்டித்ததுடன், அவர்கள்மீது போலீசில் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    இதன் முன்விரோத காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதற்கிடையே அகரம் பகுதியில் ஒரு நபர் அரிவாளுடன் சுற்றுவதாக முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்துச்சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளார்கள்.

    விசாரணையில் அவர் லூர்துபிரான்சிஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராமசுப்ரமணியம் என்பது தெரியவந்த நிலையில் அவர் கைதுச்செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் ஓர் குற்றவாளியான மாரிமுத்து என்பவரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தூத்துக்குடி
    காவல்துறை
    காவல்துறை
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தூத்துக்குடி

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு மதுரை
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட செய்திகள்
    வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர் தமிழ்நாடு

    காவல்துறை

    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025