NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம் 
    போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்

    போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 05, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்கள் என மொத்தம் 650க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அதுமட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோர் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இதனால் ஒவ்வொரு மாதமும் இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவே ரூ.10.50 கோடி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆனால் ஓராண்டுக்கு மேலாக இந்த பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தற்போதுவரை கொடுக்காமல் உள்ளதால் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், அலுவல் பணியிலுள்ள ஊழியர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெ.குமாரிடம் பேராசிரியர்கள், பல்கலைக்கழக அலுவலர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    நெருக்கடி 

    பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை 

    அதன் பின்னர் இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூறுகையில், இதற்கு முன்னர் வேறு சில நிர்வாக ரீதியான பிரச்சனைகள் இருந்த நிலையிலும் நிதி நெருக்கடி இருந்ததில்லை.

    சமீபகாலமாக பல்கலைக்கழக வருவாயை அதிகரிக்க நிர்வாகம் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

    மேலும் அவர்கள், இப்பல்கலைக்கழகத்தில் நிலுவையிலுள்ள 5000க்கும் மேற்ப்பட்ட ஆடிட் ஆட்சேபத்திற்கு நிர்வாகம் உரிய பதிலளிக்காததால் அரசிடமிருந்து தேவையான நிதியையும் பெற முடியவில்லை.

    ஒவ்வொரு மாதமும் சம்பளத்தினை நம்பியே இங்கு பணிபுரியும் பலர் உள்ள நிலையில், ஓய்வூதியர்கள் மருத்துவச் செலவுக்காக வட்டிக்கு கடன் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, துணைவேந்தர், பதிவாளர் மற்றும் நிர்வாகப்பொறுப்பில் உள்ளவர்கள் நிதிநிலையினை சீரமைக்க தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    ஓய்வூதியம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    மதுரை

    மதுரையில் ஜல்லிக்கட்டு காளையை சீராக கொண்டு சென்ற மணமகள்  ஜல்லிக்கட்டு
    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மு.க ஸ்டாலின்
    கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு - 10 பேரின் ஆயுள் தண்டனையினை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்  சேலம்
    98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட  105 வயது அக்காள்!  பிறந்தநாள்

    ஓய்வூதியம்

    ஏப்ரல் 1 முதல் புதிய NPS விதி: ஓய்வூதியம் மொத்த தொகையை பெற இதை செய்திடுங்கள் தொழில்நுட்பம்
    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றம்-அறிக்கையளிக்க தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025