NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

    எழுதியவர் Nivetha P
    May 15, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்துக்கிடந்தார்.

    இதனால் கடந்தாண்டு ஜூலை 17ம்தேதி பெரும் கலவரம் அந்த பள்ளியில் நடத்தப்பட்டதோடு பள்ளி பொருட்கள் அனைத்தும் நாசமானது.

    பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீமதி மரணம் மற்றும் இந்த கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையினை மேற்கொண்டு வந்தனர்.

    9 மாதக்கால விசாரணைக்குப்பிறகு சிபிசிஐடி இதுகுறித்த 1,152 பக்க குற்றப்பத்திரிகையினை இன்று(மே.,15)தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், மாணவியின் மரணம் தற்கொலை தான்.

    பாலியல் தொந்தரவு மற்றும் கொலைக்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.

    குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி மரணத்திற்கு காரணமில்லை.

    பள்ளி தாளாளர்,செயலாளர்,ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    கலவரம் 

    தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் முறைப்படுத்தவில்லை

    மேலும், சக மாணவர்கள் மற்றும் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பமில்லை என்று தெரிகிறது.

    தொடர்ந்து, மாணவி ஸ்ரீமதி தங்கியிருந்த விடுதியானது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று நடத்தப்படவில்லை.

    மாணவி இறந்த அன்றைய தினமே இறப்புக்கான காரணத்தினை காவல்துறை கூறியிருந்தால் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காது.

    தமிழ்நாடு பெண்கள் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தை கனியாமூர் பள்ளி முறைப்படுத்தவில்லை என்னும் காரணத்தினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அந்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கலவரம்
    சிபிசிஐடி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  பள்ளி மாணவர்கள்
     ஃபர்ஹானா படத்தின் சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்  தமிழ் திரைப்படங்கள்
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி இந்தியா

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா

    சிபிசிஐடி

    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் திருநெல்வேலி
    வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025