NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
    பழுதான விமானத்தை சரி செய்வதற்கு தேவையான விமான உதிரி பாகங்களும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மீண்டும் கனடாவுக்கு அழைத்து செல்ல கனடாவில் இருந்து இன்னொரு விமானம் அனுப்பட்டுள்ளது.

    அதோடு, பழுதான விமானத்தை சரி செய்வதற்கு தேவையான விமான உதிரி பாகங்களும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், அவரும் அவரது தூதுக்குழுவினரும் புது டெல்லியில் சிக்கிக்கொண்டனர்.

    இந்நிலையில், அவரை இந்தியாவில் இருந்து அழைத்து செல்ல அவருக்காக இன்னொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

    ட்ரூடோ புதிதாக வரும் விமானத்தில் வீட்டிற்குச் செல்வார் அல்லது பழுதான விமானம் சரிசெய்யப்படும் வரை காத்திருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பீஜன்

     இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவி வரும்  பதட்டம்

    "கனேடிய தூதுக்குழுவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு கனேடிய ஆயுதப்படைகள் சிறந்த முயற்சிகளை எடுத்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அவர்கள் கனடாவிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்பு இருக்கிறது." என்று ட்ரூடோவின் அலுவலகம் கூறியுள்ளது.

    காலிஸ்தான் தீவிரவாத பிரச்சனைகளால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்கனவே பதட்டமான நிலை நிலவி வரும் நிலையில், பிரதமர் ட்ரூடோவின் விமானம் பழுதாகி நிலைமையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது.

    2018இல் பிரதமர் ட்ரூடோ முதல்முறையாக இந்தியாவிற்கு வந்ததில் இருந்தே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    2018இல் அவர் இந்தியா வந்த போது, கனேடிய மண்ணில் ஒரு இந்திய அரசியல்வாதியை படுகொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் எப்படியோ கனடாவின் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    ஜஸ்டின் ட்ரூடோ

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    ஜி20 மாநாடு - டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? ஜி20 மாநாடு
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை பாரத்

    கனடா

    கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம் உலக செய்திகள்
    10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா உலகம்
    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் இந்தியா
    'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில் உலக செய்திகள்

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  கனடா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025