NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு 
    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு

    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு 

    எழுதியவர் Nivetha P
    Nov 15, 2023
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2022ம்.,ஆண்டு சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் பேட்டரி ரிலே பெட்டியினை திருடியதாக ரயில்வே பாதுகாப்புப்படை தாம்பரம் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு அரசு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    அச்சிறுவன் கடந்த டிசம்பர் 31ம்.,தேதி சீர்திருத்த பள்ளி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் காரணமாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தினை தொடர்ந்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகள்,சிறப்பு இல்லங்கள் உள்ளிட்டவற்றின் மேம்பாடுகள் மற்றும் திறன்கள் குறித்து அறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஓர் பிரதிநிதி கொண்டு முன்னாள் நீதிபதி தலைமையில் உயர்நிலை குழு அமைக்க உத்தரவிட்டார்.

    பரிந்துரை 

    புது சட்டங்களை உடனே அமல்படுத்த அறிவுறுத்தல் 

    அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு கடந்த ஏப்ரல்.,11ம் தேதி அமைக்கப்பட்டது.

    இந்த குழுவானது தமிழ்நாடு முழுவதுமுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகள்,சிறப்பு இல்லங்கள் உள்ளிட்டவற்றிற்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது 500 பக்க அறிக்கையினை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    அதில், பாதுகாப்பு இல்லங்களை பதிவு செய்தல் மற்றும் அங்கீகரித்தலுக்கான விதிகளை மறுஆய்வு செய்து திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    சீர்திருத்த பள்ளிகள், பாதுகாப்பு விடுதிகளுக்கான புது சட்டங்கள் கடந்த 2021ம் ஆண்டு இயற்றப்பட்டு 2022ம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ள சட்டங்களை உடனே அமலுக்கு கொண்டுவர வேண்டும்.

    அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் 24 மணிநேர மனநல ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டும்.

    நியமனம் 

    கூர்நோக்கு இல்லங்களில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்

    மாவட்டத்திற்கு ஓர் இல்லமாவது செயல்படும் பட்சத்தில் அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சீர்திருத்த பள்ளிகள் சிறைபோல் இல்லாமல் புது கட்டமைப்புகள் செய்யப்படவேண்டும்.

    சிறுவர்கள் எந்நேரமும் சிறையில் அடைத்து வைக்காமல், அவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.

    கண்காணிப்பாளர்களோடு துணை கண்காணிப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 13-16 வயது வரை உள்ளோரை ஒரு குழுவாகவும், அதற்கு மேற்பட்ட வயதுடையோரை ஓர் குழுவாகவும் தனித்தனியே அடைக்கவேண்டும்.

    துணி துவைக்க இயந்திரங்கள், நவீன கழிப்பறை வசதிகள், கொசு விரட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

    அறிக்கை 

    சமையல் செய்வோர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட வேண்டு

    காலநிலை ஊதியம் அளிக்கப்பட்டு சமையல் செய்வோர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

    குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான தனி பிரிவின் கீழ் சீர்திருத்த பள்ளிகளை கொண்டுவர, இயக்குனர்கள் தலைமையில் சிறப்பு சேவை துறைகளை உருவாக்கி தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த அறிக்கையினை அளிக்கையில் நீதிபதி சந்துருவின் மகள் சக்தி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத்துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்டோர் அருகில் இருந்தனர்.

    நன்றி 

    முன்னாள் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்

    இந்நிலையில் இந்த அறிக்கையினை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைத்தளத்தில், "மதிப்பூதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் குழந்தைகள் நலன் கருதி இப்பணியினை ஏற்று செய்து முடித்த முன்னாள் நீதிபதி சந்துருவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்" என்றும்,

    "விரைவில் இந்த பரிந்துரைகள் சமூகநலத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என்றும் பதிவு செய்துள்ளார்.

    இந்த அறிக்கை குழந்தைகள் தினமான நேற்று(நவ.,14) முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மு.க ஸ்டாலின்
    குழந்தைகள்
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது  விபத்து
    லியோ வெற்றி விழா- நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? லியோ
    அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை  வருமான வரித்துறை
    இறைவன் முற்றுப்புள்ளி வைப்பார்- சிவகார்த்திகேயன் உடனான சர்ச்சை குறித்து இமான் கருத்து இசையமைப்பாளர்கள்

    மு.க ஸ்டாலின்

    மோடி கூறிய 5-Tக்கு பதில் 5-c தான் ஆட்சியில் நடக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் மோடி
    உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின் ட்விட்டர்
    சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் மாற்றியமைப்பு - முதல்வர் தமிழ்நாடு
    தமிழகத்தில் 2.80 லட்சம் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை  தமிழ்நாடு

    குழந்தைகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை

    சென்னை உயர் நீதிமன்றம்

    கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு  விருதுநகர்
    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு  செந்தில் பாலாஜி
    வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025