NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

    ₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 25, 2025
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

    மதுபான கொள்முதல், பார் உரிமம் மற்றும் போக்குவரத்து டெண்டர்கள் தொடர்பான ₹1,000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் சமீபத்திய சோதனைகள் மற்றும் அதன் குற்றச்சாட்டுகளை எதிர்த்து மாநில அரசு ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.

    முன்னதாக, மது கொள்முதல் மற்றும் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மார்ச் 6 முதல் 8 வரை டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    சோதனைகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்துறைச் செயலாளரும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

    கண்டனம்

    நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு கண்டனம்

    அமலாக்க இயக்குநரின் நடவடிக்கைகள் கூட்டாட்சி கொள்கைகளை மீறுவதாகவும், மாநில ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாதிட்டனர்.

    இந்த சோதனைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை என்று அறிவிக்கவும், விசாரணை என்ற போர்வையில் டாஸ்மாக் அதிகாரிகளை அமலாக்கத்துறை துன்புறுத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறும் மனு கோரியது.

    இதைத் தொடர்ந்து, ​​அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்த நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியதோடு, மேலும் சோதனைக்கான சட்டப்பூர்வ காரணங்களை நியாயப்படுத்துமாறு கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு (மார்ச் 25) ஒத்திவைத்தனர்.

    மேலும், அமலாக்கத்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தற்காலிக தடை விதித்த அவர்கள், வழக்கு அடிப்படை விவரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர்.

    விலகல்

    காரணம் கூறாமல் விலகிய நீதிபதிகள்

    இருப்பினும், வழக்கு செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​குறிப்பிட்ட காரணங்கள் எதையும் கூறாமல், நீதிபதிகள் தாங்கள் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

    மேலும், வழக்கை வேறு ஒரு அமர்விற்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவதால், இந்த வழக்கு புதிய அமர்வால் விசாரிக்கப்படும்.

    ஏற்கனவே டெல்லி, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை மதுபான ஊழல் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்ததாக சொல்லப்படும் ₹1,000 கோடி முறைகேடு மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாஸ்மாக்
    சென்னை உயர் நீதிமன்றம்
    உயர்நீதிமன்றம்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டாஸ்மாக்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபானம்
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்  தமிழ்நாடு
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழக அரசு

    சென்னை உயர் நீதிமன்றம்

    எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அபராதம் சென்னை
    செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு பறந்த உத்தரவு செந்தில் பாலாஜி
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை
    பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம் திமுக

    உயர்நீதிமன்றம்

    'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம் வாட்ஸ்அப்
    தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்  டெல்லி
     'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை  டெல்லி
    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்  டெல்லி

    அமலாக்க இயக்குநரகம்

    பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை பிரியங்கா காந்தி
    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025