NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்
    863 கட்டமைப்புகளில் விரிசல்கள் இருப்பதாகவும், அவற்றில் 181 கட்டமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 30, 2023
    12:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜனவரி-20 முதல் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில் புதிய கட்டிட சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    சனிக்கிழமை(ஜன 28) கண்டுபிடிக்கப்பட்ட 863 கட்டமைப்புகளில் உள்ள விரிசல்கள் ஜனவரி-20 அன்று கண்டுபிடிக்கப்பட்டதைப் போலவே இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    மறுபுறம், அப்பகுதி மக்கள், அதிகாரபூர்வ கணக்கெடுப்புக்கு முரணாக, வீடுகளில் விரிசல்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.

    பத்ரிநாத், சில மலையேற்றப் பாதைகள் மற்றும் பல யாத்ரீக தலங்களை இணைக்கும் முக்கிய இடமாக ஜோஷிமத் இருக்கிறது.

    உத்தரகாண்ட் நகரம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(எல்ஏசி) அருகில் உள்ளதால், ஜோஷிமத் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

    உத்தரகாண்ட்

    எல்லாம் நன்றாக இருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்க அரசு முயல்கிறது: ஜேபிஎஸ்எஸ்

    இருப்பினும், ஜோஷிமத்தின் புவியியல் அமைப்பு மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள் காரணமாக இந்த பகுதி புதைய தொடங்கியது.

    சாமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 863 கட்டமைப்புகளில் விரிசல்கள் இருப்பதாகவும், அவற்றில் 181 கட்டமைப்புகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை என்றும் கூறியுள்ளனர். இது ஜனவரி 20 அன்று பதிவான அதே நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "எங்கள் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. நாங்கள் தரவைச் சரிசெய்து வருகிறோம். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவை சிறியதாக இருக்கும்," என்று சாமோலி மாவட்ட நீதிபதி ஹிமான்ஷு குரானா கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

    PTI வெளியிட்ட தகவலின் படி, அப்பகுதி மக்கள் அதிகாரபூர்வ கூற்றுக்களை மறுத்து, கட்டுமானங்களில் விரிசல்கள் தினசரி ஏற்படுவதாக கூறி இருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட் ஐபோன்
    ஜாமீனில் வெளியே வந்த பலாத்கார குற்றவாளி வாளால் கேக் வெட்டி கொண்டாட்டம் பாஜக
    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி கொரோனா
    ஓலா எஸ்1 ப்ரோ முன் சக்கரம் உடைந்து விபத்து! ஐசியூவில் இளம்பெண்; ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025