NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?
    பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் கோயல் கைது செய்யப்பட்டார்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் திடீர் கைது: என்ன காரணம்?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 02, 2023
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று(செப் 1) கைது செய்யப்பட்டார்.

    அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, அமலாக்க இயக்குனரகம்(ED) அவரிடம் விசாரணை நடத்தியது.

    முதலில், விசாரணைக்காக கோயல் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்திற்கு(SFIO) நேற்று அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கிருந்து ED அதிகாரிகள் அவரை விசாரிக்க அழைத்துச் சென்றனர்.

    ஏற்கனவே, ED அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த இரண்டு முறையும் அவர் அமலாக்க இயக்குனரகத்தில் ஆஜராகவில்லை.

    இந்நிலையில், நேற்று நடந்த விசாரணைக்கு பிறகு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் கோயல் கைது செய்யப்பட்டார்.

    டொய்ஜ்

    கனரா வங்கிக்கு ரூ.538 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு 

    74 வயதான கோயல், மும்பையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார். அந்த நீதிமன்றத்தில் ED அவரை காவலில் வைக்க கோரிக்கை விடுக்கும்.

    கடந்த மே 5ஆம் தேதி, கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் சில முன்னாள் நிறுவன நிர்வாகிகள் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) FIR பதிவு செய்தது.

    கனரா வங்கியின் புகாரின் பேரில் இந்த FIR பதிவு செய்யப்பட்டது.

    ஜெட் ஏர்வேஸ்(இந்தியா) லிமிடெட்க்கு ரூ.848.86 கோடி கடன் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதில் ரூ.538.62 கோடி நிலுவையில் உள்ளதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    செப்.2ஆம் தேதி விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா L1  இஸ்ரோ
    புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை 20% அதிகரித்தது மத்திய அரசு மத்திய அரசு
    இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு  கொரோனா

    விமான சேவைகள்

    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு! ஏர் இந்தியா
    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025