NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
    இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

    அமெரிக்காவின் வரி கொள்கைக்கு இடையே இன்று இந்தியாவிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 21, 2025
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று இந்தியா வருகை தருகிறார்.

    இது நான்கு நாள் பயணமாகும். அவருடன் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் உள்ளனர்.

    இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் அவருக்கு விருந்தளிக்கிறார்.

    இந்த சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த முன்னேற்றம், இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார, அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் இந்திய குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.உலக நாடுகள் மீது பரஸ்பர வரிகளை அமெரிக்கா விதித்து வரும் இந்த சூழலில், குறிப்பாக இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீது 26% வரி விதித்துள்ள நேரத்தில் JD வான்ஸின் இந்தியா வருகை கவனத்தை ஈர்க்கிறது.

    நிகழ்ச்சி நிரல்

    இந்தியாவில் JD வான்ஸ்-இன் நிகழ்ச்சி நிரல் 

    பிரதமர் மோடி தலைமையிலான பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி வந்தவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலுக்கும், உள்ளூர் கைவினைப்பொருட்கள் சந்தைக்கும் செல்வார்.

    ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை வான்ஸ் குழுவினர் ஜெய்ப்பூருக்குச் சென்று வரலாற்று சிறப்புமிக்க அமர் கோட்டை மற்றும் பிற கலாச்சார தளங்களைப் பார்வையிடுவார்கள்.

    அன்றைய தினம், துணை ஜனாதிபதி ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார்.

    இதில் இராஜதந்திரிகள், கொள்கை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா
    சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிற்கு பாகிஸ்தான் கடிதம்  சிந்து நதி நீர் ஒப்பந்தம்

    அமெரிக்கா

    104% க்கு பதிலடியாக 84%: அமெரிக்கப் பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதித்துள்ள சீனா  சீனா
    பரஸ்பர வரிக்கு 90 நாள் இடைநிறுத்தம்; சீனாவிற்கு வரியை 125% ஆக உயர்த்திய டிரம்ப் சீனா
    இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தீவிரவாதி தஹாவூர் ராணா, திகார் சிறையில் அடைக்கப்படுவார் இந்தியா
    விவாகரத்து வதந்திகள் குறித்து மனம் திறந்த மிஷல் ஒபாமா பராக் ஒபாமா

    இந்தியா

    டிரம்ப் வரிகளைத் தவிர்க்க இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 5 விமானங்கள் நிறைய அனுப்பப்பட்ட ஐபோன்கள் அமெரிக்கா
    26/11 சதிகாரர் தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டாதாக தகவல் அமெரிக்கா
    ரூ.63,000 கோடிக்கு பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் கடற்படை ஜெட் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் கடற்படை
    2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு சொந்த விண்வெளி நிலையம் இருக்கும்: அமைச்சர் தகவல் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025