NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் 
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்

    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும் 

    எழுதியவர் Nivetha P
    May 18, 2023
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பாலா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் அந்தந்த மாநில அரசுகள் நடத்துவதற்கு சிறப்பு சட்டங்களை இயற்றி வைத்துள்ளது.

    இந்நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாக கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பீட்டா போன்ற அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன.

    இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நடந்து முடிந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் இன்று(மே.,18) அளித்துள்ளது.

    அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக மெரினாவில் போராட்டம் நடத்தியபோது தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டினை அனுமதிக்கும் அவசர சட்டத்தினை இயற்றியது.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டில் துன்புறுத்தல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல் 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடுஅரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்.

    இதுபோன்ற சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு உரிமையுள்ளது.

    எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடுஅரசு அளித்த ஆவணங்கள் அனைத்தும் எங்களுக்கு திருப்தியளித்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.

    மேலும் மனிதர்களுக்கு சமமாக விலங்குகளுக்கு உரிமையில்லை.

    தமிழகஅரசின் சட்டத்திருத்தம் சட்டவிதிகளுக்கு உட்பட்டே இயற்றப்பட்டுள்ளது.

    ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர், அதில் நீதிமன்றம் தலையிடமுடியாது.

    எனினும் கலாச்சாரம் என்றாலும், துன்புறுத்தலினை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா?என்பதனை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து,ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜல்லிக்கட்டு
    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஜல்லிக்கட்டு

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 50 அடி உயரத்திற்கு சீறி பாய்ந்த காளை - வைரலாகும் வீடியோ தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு மாவட்ட செய்திகள்
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    மோக்கா புயல்: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இந்தியா
    உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித் பா ரஞ்சித்
    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல்  காவல்துறை
    தமிழ் பாடத்தில் 100க்கு 138 மதிப்பெண் பெற்ற மாணவி - 12ம் வகுப்பு சர்ச்சை விவகாரம்  மதுரை

    உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி - போலீஸ் அனுமதி  தமிழ்நாடு
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025