NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 
    வரலாற்று செல்வாக்கு மிக்க அந்த நாடுகள் திறன்களை ஆயுதமாக்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

    'இரட்டை வேடம் கட்டும் ஆதிக்க நாடுகள்': வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இது இன்னும் இரட்டை வேடம் கட்டும் உலகமாகவே உள்ளது என்றும், செல்வாக்கு மிகுந்த ஆதிக்க நாடுகள் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

    வரலாற்று செல்வாக்கு மிக்க அந்த நாடுகள் திறன்களை ஆயுதமாக்கியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம், ஐக்கிய நாடுகளின் இந்தியா மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ORF) நடத்திய அமைச்சர்கள் அமர்வில் நேற்று பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இதை தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கு கனடாவுக்கு இடையிலான மோதல் வலுப்பெற்றிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் "ஆதிக்க நாடுகள்" குறித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது.

    டுய்ஜ்க்க்

    வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

    உலகளவில் மாற்றத்திற்கான அரசியல் அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால், அந்த மாற்றத்தை ஏற்பதற்கு அரசியல் விருப்பம் இல்லை.

    ஐநா பாதுகாப்பு கவுன்சில் போன்ற செல்வாக்கு மிக்க இடங்களில் அமர்ந்துள்ளவர்கள் மாற்றத்திற்கான அழுத்தத்தை எதிர்க்கிறார்கள்.

    இன்று பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் தங்கள் உற்பத்தி திறன்களை மேம்படுத்துகிறார்கள். அதே போல், நிறுவன செல்வாக்கு அல்லது வரலாற்று செல்வாக்கு உள்ளவர்கள் உண்மையில் அந்த திறன்களையும் ஆயுதமாக்கியுள்ளனர்.

    அவர்கள் அனைவரும் சரியான விஷயங்களைச் சொல்வது போல் இருக்கும். ஆனால், இது இரட்டை வேடம் கட்டும் உலகம்.

    மாற்றத்தை கொண்டுவர ஒரு வகையில், உலகளாவிய தெற்கு, சர்வதேச அமைப்புக்கு மேலும் மேலும் அழுத்தத்தை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    கனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ  கனடா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 வினோத விளையாட்டுகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
    1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்  கனடா

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025