NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு 

    பூரி ரத யாத்திரைக்கு AI தொழில்நுட்பத்துடன் பலத்த பாதுகாப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    தேர் திருவிழா என்றும் அழைக்கப்படும் தனித்துவமான ஜகந்நாதர் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று (ஜூலை 7) தொடங்கியது.

    பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலைப் போலவே பழமையானது என்று நம்பப்படும் இந்த திருவிழா, இந்த ஆண்டு 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் இதற்காக ஒடிசாவில் கூடியிருப்பதால் கூட்டத்தை சிறப்பாக நிர்வகிக்க AI தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

    இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்படும் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இது இருப்பதால், ஜகந்நாதர் திருவிழாவின் பாதுகாப்பு பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

    "முதன்முறையாக பாதுகாப்புக்காக நாங்கள் AI- அடிப்படையிலான CCTV கவரேஜைப் இந்த ஆண்டு பயன்படுத்தியுள்ளோம்." என்று ஒடிசா கூடுதல் டிஜிபி தயாள் கங்வார் கூறியுள்ளார்.

    ஒடிசா 

    CCTV கேமராக்கள்,  ட்ரான்கள் மூலம் பாதுகாப்பு பணிகள் நடைபெறுகிறது 

    "பாதுகாப்புக்காக 40 இடங்களில் CCTV கேமராக்களை வைத்துள்ளோம். CCTV அமைப்புடன் இணைக்கப்பட்ட AI ஐப் பயன்படுத்தி கண்காணிப்பு பணி நடைபெறும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    " CCTV கேமராக்களில் தெரியாத பகுதிகளை கண்டறியவும், நெரிசல் பகுதிகளை அடையாளம் காணவும் ஒரு ட்ரோன் அமைப்பைப் பயன்படுத்த உள்ளோம். மேலும், PA(பொது முகவரி) அமைப்புடனான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் ஏற்படும் 4-5 பகுதிகள் உள்ளன. எனவே, காவல்துறை அதிகாரிகளுக்கு உதவ அப்பகுதிகளில் ட்ரான்கள் பயனப்டுத்தப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.

    அது போக, சட்டம் ஒழுங்கை பராமரிக்க, மாநில மற்றும் மத்திய அரசுகளில் இருந்து 180 படைப்பிரிவுகள்(ஒரு படைப்பிரிவில் 30 பணியாளர்கள் உள்ளனர்) பாதுகாப்புப் படையில் ஈடுபட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒடிசா
    பூரி ரத யாத்திரை

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    ஒடிசா

    ஒடிசாவில் ரயில்வே ஊழியரால் பெரும் விபத்து தவிர்ப்பு  ரயில்கள்
     'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது  இந்தியா
    லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி  ரயில்கள்
    ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது இந்தியா

    பூரி ரத யாத்திரை

    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது  இந்தியா
    இன்று கோலாகலமாக தொடங்கியது பூரி ரத யாத்திரை: குடியரசு தலைவரும் பங்கேற்க உள்ளார் ஒடிசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025