NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு 

    இஸ்ரேல் தூதரகத்தில் குண்டுவெடிப்பு: அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 30, 2023
    09:48 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஒரு சிறிய குண்டுவெடிப்பு நடந்ததது.

    அந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    துக்ளக் சாலை காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    கடந்த புதன்கிழமை, தேசிய பாதுகாப்புப் படை(என்எஸ்ஜி), என்ஐஏ மற்றும் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு ஆகியவற்றின் குழு விசாரணைக்காக சம்பவ இடத்துக்கு சென்றன.

    குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து இலைகள், செடிகள் மற்றும் மண்ணின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் என்ன என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    டக்ஜ்க

    சிசிடிவி கேமராவில் சிக்கிய இரண்டு சந்தேக நபர்கள்

    குண்டுவெடிப்பு தொடர்பான அறிக்கையை டெல்லி காவல்துறையிடம் என்எஸ்ஜி விரைவில் சமர்ப்பிக்க இருக்கிறது.

    கடந்த செவ்வாய்கிழமை மாலை 5:45 மணியளவில் சாணக்யபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இருக்கும் நந்தா மாளிகைக்கு முன்னால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், அந்த இடத்திற்கு அருகில் இஸ்ரேலிய தூதருக்கு எழுதப்பட்ட "துஷ்பிரயோகமான" கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

    இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் இரண்டு சந்தேக நபர்கள் சிக்கியதாகவும், அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை
    இஸ்ரேல்

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டெல்லி

    கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்  தாய்லாந்து
    காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் அமெரிக்கா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்  ஆம் ஆத்மி

    காவல்துறை

    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் சபரிமலை
    ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம்  சென்னை
    பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை பெங்களூர்
    பாராளுமன்றத்தில் இரட்டை பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டனர்: டெல்லி காவல்துறை டெல்லி

    காவல்துறை

    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    அண்ணனூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் திடீர் தீ விபத்து  காவல்துறை
    நாகூர் தர்க்காவின் 467வது கந்தூரி விழா - இன்று கொடியேற்றத்தோடு துவக்கம்  தமிழ்நாடு

    இஸ்ரேல்

    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் அமெரிக்கா
    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025