NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 
    வதந்திகளை பரவவிடாமல் தடுப்பதற்காக, 4 மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் இணைய சேவைகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

    100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 23, 2023
    12:31 pm

    செய்தி முன்னோட்டம்

    நான்கு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் இணைய சேவைகள் முழுமையாகத் திரும்பும் என்று அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

    "அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பத்தற்காகத்தான், மாநில அரசு இணையத் தடை விதித்திருந்தது என்பதை மணிப்பூர் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் பொதுமக்களுக்கு இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்" என்று சிங் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

    ஜூலை 25 அன்று, மணிப்பூரில் பிராட்பேண்ட் சேவைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாநில உள்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், அப்போது மொபைல் இன்டர்நெட் சேவைவுக்கு விதிக்கப்பட்டிருத்த தடை நீக்கப்படவில்லை.

    ஜக்கிவாசிப்பி

     இணையத் தடையால் பல்வேறு துறைகள் பாதிப்பு 

    அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள் மற்றும் ஆன்லைன் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மணிப்பூரின் இணையத் தடை பாதித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் உள்ள குக்கி என்ற பழங்குடியின சமூகத்திற்கும் அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மெய்த்தே சமூகத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் மே 3ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்தது.

    அதன் பிறகு, 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இப்போது வரை அந்த மாநிலம் பதட்ட நிலையுடன் தான் செயல்பட்டு வருகிறது.

    இதனால், வதந்திகளை பரவவிடாமல் தடுப்பதற்காக, 4 மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் இணைய சேவைகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மணிப்பூர்

    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  காவல்துறை
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  கலவரம்
    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மியான்மர்
    'மணிப்பூர் பெண்களின் வீடியோவை பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது' அமெரிக்கா

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025