Page Loader
இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
May 12, 2025
02:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை (மே 12) இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டுள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுக்கு கோட்டில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தொடங்கியது. பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நிலைகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தொடுத்த நிலையில், அனைத்தையும் முறியடித்த இந்திய பாதுகாப்புப் படைகள், அதன் பின்னர் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மற்றும் முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்கியது.

அமைதி

சேதம் அதிகமானதால் தாக்குதலை நிறுத்த கோரிக்கை

இந்திய பாதுகாப்புப் படைகளின் கடும் பதிலடியால் பாகிஸ்தான் நிலைகுலைந்தது. இதையடுத்து மேலும், தாக்குதலை சமாளிக்க முடியாது எனும் நிலையில், கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் DGMO தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என இந்திய DGMO விடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு இரு தரப்பும் தாக்குதலை நிறுத்த முடிவு செய்தது. மேலும், DGMO மட்டத்தில் திங்கட்கிழமை மீண்டும் பேச்சு நடத்துவதாக அப்போது அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பாகிஸ்தான் ஒரு சில அத்துமீறல்களை செய்தாலும், இந்தியா மீண்டும் கடும் பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் அடங்கியது. இந்நிலையில், திங்கட்கிழமை மாலை பாகிஸ்தானுடனான DGMO மட்டத்திலான கூட்டத்திற்கு முன்னர் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post