NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா

    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 28, 2023
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் 31 'MQ-9B' வகை பறக்கும் பாதுகாப்பு ட்ரோன்களை வாங்குவதற்கு, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா ராணுவத்தின் கண்காணிப்புத் திறனையும், ஆளில்லா தாக்குதல் திறனையும் மேம்படுத்துவதற்காக இந்த வகையான ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா.

    இந்த ட்ரோன்களை முக்கியமாக இந்திய, சீன எல்லையான LAC (Line of Actual Control) பகுதியில் பயன்படுத்தவும் இந்தியா ராணுவம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்த ட்ரோன்களை வாங்குவதற்காக தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை எழுப்பியிருக்கிறது இந்தியா.

    ராணுவம்

    திறன் வாய்ந்த MQ-9B ட்ரோன்: 

    இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தபின்பு, ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய ட்ரோன்கள் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையின் போது முழுமையான மதிப்பு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    35 மணி நேரம் வரை வானில் இடைநில்லாமல் செயல்படக்கூடிய இந்த ட்ரோன்களானது, தாக்குதலுக்காக நான்கு ஏவுகணைகள் மற்றும் 450 கிலோ வெடிபொருட்களையும் கொண்டிருக்குமாம்.

    முன்னதாக, 2020ம் ஆண்டு இந்த ட்ரோன்களில் இரண்டை இந்தியப் பெருங்கடலின் கண்காணிப்புப் பணிகளுக்காக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது இந்தியா.

    இந்த 31 ட்ரோன்களில், கப்பற்படைக்கு 15 ட்ரோன்களும், விமானப் படை மற்று ராணுவத்திற்கு தலா 8 ட்ரோன்களும் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியா
    அமெரிக்கா
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; இந்தியா
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    இந்தியா

    சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா? நிமோனியா
    சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு மருத்துவம்
    LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்? கிரிக்கெட்
    2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2024

    அமெரிக்கா

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் ஈரான்
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் குடியரசு தலைவர்

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025