NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
    இந்தியா

    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    February 24, 2023 | 03:42 pm 1 நிமிட வாசிப்பு
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
    தி இந்தியா டயலாக்’ அமர்வில் அவர் இன்று(பிப் 24) மெய்நிகராக உரையாற்றினார்.

    ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார். நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவால் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார். இந்த தடுப்பூசி பிரச்சாரம் 18.3 பில்லியன் டாலர் இழப்பைத் தடுத்து பொருளாதாரத்தையும் காப்பாற்றியுள்ளது என்று மாண்டவியா தெரிவித்திருக்கிறார். கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தின் செலவைக் கணக்கிட்டதில், 15.42 பில்லியன் டாலர் நிகர பலனை இந்தியா கண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

    திறம்பட வேலை செய்த இந்திய அரசாங்கம்

    ஜனவரி 2020இல் உலக சுகாதார அமைப்பால்(WHO) கோவிட்-19, பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் இந்தியாவால் எடுக்கப்பட்டது என்று மாண்டவியா கூறியுள்ளார். தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்த 'தி இந்தியா டயலாக்' அமர்வில் அவர் இன்று(பிப் 24) மெய்நிகராக உரையாற்றினார். 29 மார்ச் 2020 முதல், மருந்துகள், தடுப்பூசிகள், தளவாடங்கள் போன்ற தொற்றுநோய் மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்துவதற்காக 11 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை இந்திய அரசாங்கம் விரைவாக அமைத்தது என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜியின் தலைமையில் இந்தியா, திறம்பட நிர்வகிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சுகாதாரத் துறை
    மன்சுக் மாண்டவியா

    இந்தியா

    தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா
    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! போக்குவரத்து விதிகள்
    ஜி20 நிகழ்வில் நிதியமைச்சரை சந்தித்த கீதா கோபிநாத் நிர்மலா சீதாராமன்

    சுகாதாரத் துறை

    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்

    மன்சுக் மாண்டவியா

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி இந்தியா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு இந்தியா
    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023