NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 
    அடுத்த செய்திக் கட்டுரை
     'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 
    இந்த ஏவுகணைக்கு 'அக்னி பிரைம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

     'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 09, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்த ஏவுகணைக்கு 'அக்னி பிரைம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் அக்னி பிரைம் ஏவுகணையின் முக்கியமான ஏவுகணை சோதனை கடந்த புதன்கிழமை நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த ஏவுகணை சோதனை அக்னி பிரைம் ஆயுத அமைப்பின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது.

    ஏற்கனவே மூன்று வெற்றிகரமான பகல்நேர சோதனைகள் முடிவடைந்திருந்த நிலையில், தற்போது இரவு நேர சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.

    details

    இது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும்: பாதுகாப்பு அமைச்சகம்

    1,000 கி.மீ முதல் 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த கேனிஸ்டர் ஏவுகணையை, மிக குறுகிய அறிவிப்பில் ஏவ முடியும்.

    இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள உந்துவிசை அமைப்பு, வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டதாகும்.

    700-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-I, 2,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-II, 3,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-III, 4,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-IV மற்றும் 5,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-V ஆகிய ஏவுகணைகள் டிஆர்டிஓ உருவாக்கிய அக்னி ஏவுகணைகளின் பிற வகைகளாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஒடிசா

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    இந்தியா

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் பீகார்
    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது சிபிஐ
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் : 255 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்பு! ஒலிம்பிக்

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025