NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
    இந்தியா

    தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு

    தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023, 04:28 pm 1 நிமிட வாசிப்பு
    தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
    பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், தன் பாலின ஈர்ப்பு கொண்ட ஒருவர் நீதிபதியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாக இருக்கும் .

    தன்பாலின ஈர்ப்புப்பாளராக இருப்பதால் சவுரப் கிர்பால் என்ற வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த வாதத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், அதை நிராகரித்திருக்கிறது. மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவரே நாட்டின் முதல் 'தன்பாலின ஈர்ப்பாளர்' நீதிபதியாக இருப்பார். சௌரப் கிர்பால், சோமசேகர் சுந்தரேசன், ஆர் ஜான் சத்யன் ஆகிய 3 மூன்று பேரின் பதவி உயர்வுக்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்த தகவலை உச்சநீதிமன்றம் இணையதளத்தில் வெளியிட்டது. விதிகளின்படி, இரண்டு முறை ஒரே நபரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தால் அதை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி

    கிர்பால் பிரச்சனையில், அரசாங்கம் கூறியிருந்த இரண்டு காரணங்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத்திய அரசு கூறியிருந்த முதல் ஆட்சேபனையில், கிர்பாலின் பாலீர்ப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் ஆட்சபனையில், கிர்பாலின் துணைவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், அதனால் பாதுகாப்பு பிரச்சனை வரலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த இரண்டையும் நிராகரித்த உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசின் கருத்துக்கள் "அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு வெளிப்படையாக முரணானது" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பல அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்கள் வெளிநாட்டு குடிமக்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பதைக் கொலீஜியம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதையடுத்து, மூன்றாவது முறையாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கிர்பாலை கொலீஜியம் பரிந்துரைத்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், தன் பாலின ஈர்ப்பு கொண்ட ஒருவர் நீதிபதியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாக இருக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்
    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்

    இந்தியா

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி காங்கிரஸ்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி உலக செய்திகள்
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023