NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி
    75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?

    இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-விண்வெளி ஆராய்ச்சி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 14, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று உலகளவில் இந்தியா முன்னணியில் இருக்கும் துறைகளுள் ஒன்று விண்வெளித்துறை. இந்தத் துறையில் டாப் 10 நாடுகளில் ஒன்றாக விளங்கி வருகிறது இந்தியா.

    பிற உலக நாடுகள் அளவிற்கு விண்வெளிக்குத்துறைக்கு நிதி ஒதுக்கி, சக்தி வாய்ந்த விண்வெளித் தளவாடங்களை உருவாக்க முடியவில்லை என்றாலும், குறைந்த நிதியில் தங்களுக்கென ஒரு பாதையை வகுத்து செயல்பட்டு, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது இந்தியா.

    குறைந்த செலவில், செவ்வாய் கிரக்கிற்கான திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது இந்தியா தான். குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும், வணிகச் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதும் இந்தியா தான்.

    இந்தியா மட்டுமின்றி, பிற வளர்ந்த உலக நாடுகளும் கூட இந்தியாவின் விண்வெளித்துறையால் பயனடைந்து வருகின்றன.

    விண்வெளி

    தொடக்கப்புள்ளி: 

    1960-களில், இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவடைய போராடிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தேசியக் குழுவின் தலைவர் விக்ரம் சாராபாய்க்கு ஒரு பேராசை இருந்தது.

    அது, இந்தியாவின் தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம் மற்றும் கிராப்புற மேம்பாடு ஆகியவற்றுக்கு விண்வெளித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது.

    ஆனால், அந்த சமயத்தில் ராக்கெட் அல்லது செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை இந்தியா கொண்டிருக்கவில்லை. ஆனால், ஒரு சிலர் மட்டும் விக்ரம் சாராபாயின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

    விளைவு, 1975-ம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் தொடர்புக்குத் தேவையான INSAT மற்றும் IRS செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தியது இந்தியா.

    இந்தியா

    உள்நாட்டு ராக்கெட் தயாரிப்பு: 

    செயற்கைக்கோளைத் தொடர்ந்து, இந்தியாவிற்கான சொந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இதற்கெல்லாம் உதவும் வகையில் 1969-ல் இஸ்ரோவும் நிறுவப்பட்டது.

    1980-ல் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் வகையிலான சிறிய SLV-3 ராக்கெட்டை உருவாக்கியது இந்தியா. 1984-ல் ராக்கேஷ் ஷர்மா என்ற முதல் இந்தியர் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருந்தார்.

    2000-ம் ஆண்டு முதலே, இந்தியாவின் செயற்கைக்கோள்களை மட்டுமல்லாது பிற நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் வணிக நோக்கத்துடன் உதவி செய்யத் தொடங்கியது இந்தியா.

    இது ஒருவகையில் இந்தியாவின் வருவாய்க்கும் வழிவகை செய்தது. இந்தியாவின் இந்த விண்வெளி வளர்ச்சிக்கு வித்திட்ட விக்ரம் சாராபாயே, இந்திய விண்வெளித் திட்டங்களின் தந்தை என்றழைக்கப்பட்டார்.

    சந்திரன்

    நிலவை நோக்கிய இந்தியாவின் பயணம்: 

    இந்தியாவின் முக்கியமான விண்வெளித் திட்டங்களுள் சந்திரயான்-1. இந்தத் திட்டத்தின் மூலம், நிலவுக்கு ஆய்வுக்கலனை அனுப்பிய நாடுகள் பட்டியலில் நான்காவது நாடாக இணைந்தது இந்தியா.

    ஆய்வுக்கலனை அனுப்பியது மட்டுமின்றி, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

    இந்தத் திட்டங்களின் தொடர்ச்சியாகவே சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

    செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த பிற உலக நாடுகளை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா, 2017-ல் ஒரே ஏவலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கும் அளவிற்கு வளர்ச்சியைக் கண்டது.

    செவ்வாய்

    செவ்வாயை நோக்கிய பயணம்: 

    மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (மங்கல்யான்) என்ற திட்டத்துடன் செவ்வாயை நோக்கிய பயணத்தை 2013-ம் ஆண்டு மேற்கொண்டது இந்தியா. இந்தத் திட்டத்தின் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த நாடு என்ற பெருமையையும் பெற்றது இந்தியா.

    21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் விண்வெளித்துறையை மேலும் ஒருபடி மேலே எடுத்துச் செல்ல IN-SPACe மற்றும் Department of Space ஆகிய அமைப்புகள் நிறுவப்பட்டன.

    தற்போது விண்வெளிக்கு சுயமாக மனிதர்களை அனுப்பும் திட்டம், சூரியன் மற்றும் வெள்ளி ஆகியவற்றை செய்வதற்கான ஆய்வுக்கலன்களை அனுப்பும் திட்டம், எனப் பல்வேறு விண்வெளித் திட்டங்களை விரைவில் செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    இந்தியா
    சந்திரயான்
    அறிவியல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விண்வெளி

    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா நாசா
    நாசாவுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ

    இந்தியா

    சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள் விளையாட்டு வீரர்கள்
    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள் சைபர் கிரைம்
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 25 பேருக்கு பாதிப்பு கொரோனா
    போன்பே மற்றும் கூகுள்பே சேவைத் தளங்களுக்கு சவாலாக அறிமுகமாகியிருக்கும் யுபிஐ பிளக்இன் யுபிஐ

    சந்திரயான்

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  இஸ்ரோ
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான் 3

    அறிவியல்

    பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி, தனிம அட்டவணை நீக்கப்பட்டது   இந்தியா
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது புதிய நாடாளுமன்றம்
    லித்தியம்-அயன் பேட்டரியின் மேம்பாட்டில் முக்கிய பங்காற்றிய ஜான் குட்டெனௌ காலாமானார் உலகம்
    பால்வெளி மண்டலத்தில் தோன்றிய நியூட்ரினோவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025