NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Mar 12, 2024
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தற்போது சீனாவின் எதிர்ப்பை நிராகரித்துள்ள இந்தியா, பிரதமரின் பயணம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சீனாவிடம் எந்த காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

    "சீனா கூறிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம்" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    அருணாச்சலப் பிரதேசத்தை 'ஜாங்னான்' என்று பொதுவாக அழைக்கும் சீனா, அந்த பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமைகோரி வருகிறது. அதனால் அந்த பகுதிக்கு முக்கிய இந்திய தலைவர்கள் சென்றால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.

    இந்தியா

    பிரதமர் மோடியின் பயணத்திற்கு அதிருப்தி தெரிவித்த சீனா  

    கடந்த மார்ச் 9ஆம் தேதி, பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்று சேலா சுரங்கப்பாதை உட்பட பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

    இந்த சுரங்கப்பாதையானது, தவாங் மற்றும் கமெங் மாவட்டங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்பாக செயல்பட இருக்கிறது.இது அனைத்து வானிலைகளிலும் செயல்படக்கூடிய ஒரு சுரங்கபாதையாகும். இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(இந்திய-சீன எல்லை) மிக அருகில் அமைந்துள்ளது

    பிரதமர் மோடியின் அருணாச்சல் பயணம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த சீனா, "கடுமையான அதிருப்தியை" வெளிப்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தது.

    சீனாவின் அந்த எதிர்ப்பை இந்தியா தற்போது நிராகரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அருணாச்சல பிரதேசம்
    பிரதமர் மோடி
    சீனா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    இந்தியா

    இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை  கொரோனா
    கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி கர்நாடகா
    வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் ஏர் இந்தியா
    ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது எஸ்யூவி

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    பிரதமர் மோடி

    இந்தியாவின் UPI சேவைகள் இலங்கை, மொரிஷியஸில் அறிமுகம் இலங்கை
    இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி  இந்தியா
    பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    "உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி இந்தியா

    சீனா

    COP 28 காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட இந்தியா மற்றும் சீனா மறுப்பு இந்தியா
    இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக வெளியானது 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)' ஸ்மார்ட்போன்
    சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம்  ஒன்பிளஸ்
    பணமோசடி வழக்கில் விவோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அமலாக்கத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025