Page Loader
கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா
கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா

கனடாவுடன் முற்றும் மோதல்: கனடா தூதரை திரும்ப பெற்ற இந்தியா

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2024
08:32 pm

செய்தி முன்னோட்டம்

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடாவில் உள்ள தனது உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை இந்தியா திங்களன்று திரும்பப் பெற்றது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை 'ஆர்வமுள்ள நபர்கள்' என்று கனடா அறிவித்ததற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்ததுள்ளது. கனடாவிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரும்பப் பெறப்பட்டதை அறிவிக்கும் அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இராஜதந்திரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக அடிக்கோடிட்டுக் காட்டியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிவிப்பு

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

"அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனேடிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, உயர் ஸ்தானிகர் மற்றும் பிற இலக்கு வைக்கப்பட்ட தூதர்கள் மற்றும் அதிகாரிகளை திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது" என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, புது டெல்லியில் உள்ள கனேடிய பொறுப்பாளர் ஸ்டீவர்ட் வீலருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. கனடாவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இதர இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் அடிப்படையற்ற இலக்குகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

என்ன நடந்தது?

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தூதர்

காலிஸ்தானி பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரின் தொடர்பு இருப்பதாக சென்ற ஆண்டு கனடாவின் ட்ரூடோ அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்தியா ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கனேடிய அரசாங்கம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், ட்ரூடோ வாக்கு வங்கி அரசியல் செய்வதாகவும், கனேடிய மண்ணில் பிரிவினைவாத சக்திகளை சமாளிக்க போதுமான அளவு செய்யவில்லை என்றும் குற்றம் இந்தியா தரப்பு தெவிக்கிறது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் இந்தியா-கனடா ராஜதந்திர உறவில் விரிசல் விழுந்துள்ளது.