NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி 
    சீன நாட்டின் ஆய்வுக்கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி

    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி 

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மறுசீரமைப்பு பணிகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது.

    இதனிடையே தங்கள் நாட்டு கப்பல்களை அவ்வப்போது அனுப்பிவைப்பதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'யுவான் வாங்-3' என்னும் உளவுக்கப்பலினை சீனா இலங்கைக்கு அனுப்பிவைத்தது.

    இக்கப்பல் நிறுத்தி வைப்பதன் மூலம் இந்தியா பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது.

    இதனை பரிசீலனை செய்த இலங்கை அரசு, பின்னர் சீனாவிற்கு தாமதமாக அனுமதி வழங்கியது.

    இந்நிலையில் தற்போது சீனாவின் 'ஷி யான்-6' ஆய்வுக்கப்பலினை கடல்சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதிருப்தி 

    தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கியுள்ள இலங்கை 

    இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரான பிரியங்கா விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

    இத்தகவல் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    சீனநாட்டின் கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்படுவதால் இந்திய ராணுவ கட்டமைப்புகளை சீனா உளவுபார்க்க நேரிடும் என்று இந்தியா கவலையடைந்துள்ளது.

    இதனால் இதுகுறித்து இலங்கையிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

    இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா சம அளவில் பங்காற்றிவருகிறது.

    அதன்படி இலங்கைக்கு கடனாக சீனா 300 கோடி டாலர் கொடுத்ததோடு அவ்வப்போது தங்கள் நாட்டு கப்பல்களை இங்கு நிறுத்திவைப்பதனை வழக்கமாக கொண்டுள்ளது.

    தற்போது இலங்கை சீனாவிற்கு அனுமதியளித்தால் இந்தியா அதிருப்தி அடையும் என்பதால், தர்மசங்கடமான நிலையில் இலங்கை சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    சீனா
    இலங்கை

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    இந்தியா

    வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன? வரலாற்று நிகழ்வு
    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர் யுபிஐ

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    சீனா

    கடைசி இந்தியப் பத்திரிகையாளரையும் வெளியேற்றுகிறது சீனா இந்தியா
    விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி லியோனல் மெஸ்ஸி
    இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம் எம்ஜி மோட்டார்
    இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன  இந்தியா

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025