NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
    பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 16, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

    டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீசஸ்(DGHS) வெளியிட்டுள்ள அலுவலக உத்தரவில், "மத்திய அரசு மருத்துவமனைகள் /CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்குமாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.

    DETAILS

    உத்தரவை  யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அரசு 

    " எனினும், சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள்(ரெஸிடெண்ட்கள் உட்பட) பிராண்டட் மருந்துகளை தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர். இவை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களாலும் கவனிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்." என்று மேலும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "இந்த அலுவலக உத்தரவை யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அவரே பொறுப்பாவார்" என்றும் அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிலநேரம் வேறு வழியில்லாமல் பிராண்டட் மருந்துகளை தான் பரிந்துரைக்க வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா நோய்களுக்கும் பொது மருந்துகள் கிடைப்பதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

    பொதுவான மருந்துகள் என்பது பிராண்டட் மருந்துகளுக்கு சமமானவையே. ஆனால், பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்.. என்ன திட்டம்? ஹூண்டாய்
    வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு  திருநர் சமூகம்
    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  மேற்கு வங்காளம்
    பலதார மணத்தை தடை செய்ய நடவடிக்கை: நிபுணர் குழுவை அமைத்தது அசாம் அசாம்

    மத்திய அரசு

    கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன? தமிழ்நாடு
    'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை  தமிழக அரசு
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   இந்தியா
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025