NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    May 16, 2023
    06:21 pm
    பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்: மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு உத்தரவு 
    பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

    மத்திய அரசால் நடத்தப்படும் மருத்துவமனைகள் மற்றும் CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் வேலை செய்யும் மருத்துவர்கள் பொதுவான மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. டைரக்டர் ஜெனரல் ஹெல்த் சர்வீசஸ்(DGHS) வெளியிட்டுள்ள அலுவலக உத்தரவில், "மத்திய அரசு மருத்துவமனைகள் /CGHS ஆரோக்கிய மையங்கள்/பாலிகிளினிக்குகளில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பொது மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்குமாறு மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறப்பட்டுள்ளது.

    2/2

    உத்தரவை  யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அரசு 

    " எனினும், சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள்(ரெஸிடெண்ட்கள் உட்பட) பிராண்டட் மருந்துகளை தொடர்ந்து பரிந்துரைக்கின்றனர். இவை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களாலும் கவனிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்." என்று மேலும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த அலுவலக உத்தரவை யாரேனும் மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு அவரே பொறுப்பாவார்" என்றும் அந்த உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிலநேரம் வேறு வழியில்லாமல் பிராண்டட் மருந்துகளை தான் பரிந்துரைக்க வேண்டி இருக்கிறது என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா நோய்களுக்கும் பொது மருந்துகள் கிடைப்பதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். பொதுவான மருந்துகள் என்பது பிராண்டட் மருந்துகளுக்கு சமமானவையே. ஆனால், பிராண்டட் மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய அரசு

    இந்தியா

    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான பிரமாண்ட நடைமேடை சென்னை
    ஏழாவது இடம்! உலக தரவரிசையில் புதிய உச்சம் தொட்ட இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்! பேட்மிண்டன் செய்திகள்
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்

    மத்திய அரசு

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தப்படியே அபராதம்  போக்குவரத்து காவல்துறை
    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  அதிமுக
    தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு! மொபைல்
    மும்பை கடல் பகுதியில் புதிய கண்டுபிடிப்புகள்.. அறிவித்தது ONGC! மும்பை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023