NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    08:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    அதன்படி அவர் பிரதமர் மோடியினை நேரில் சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒன்றாக இணைந்து இன்று(ஜூன்.,1) பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது இரு நாட்டின் பிரதமர்களும் கூட்டாக இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர்.

    இந்த ரயிலானது பீகாரில் உள்ள பத்னாஹாவில் இருந்து நேபாளத்தில் உள்ள கஸ்டம் யார்டுக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    சரக்கு ரயில் 

    இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் - மோடி 

    இதனையடுத்து இருவர் முன்னிலையில் இரு நாட்டுக்கு இடையேயான ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள் நடந்தது.

    பின்னர் இது குறித்து மோடி பத்திரிகையாளர்கள் முன் பேசுகையில், போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று(ஜூன்.,1) கையெழுத்திடப்பட்டு உள்ளது.

    இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் நிறுவப்பட்டுள்ளது.

    இந்தியா-நேபாளம் இடையில் நீண்ட காலத்திற்கான மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது நம் நாட்டின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரக்கூடியது.

    இரு நாடுகள் இடையில் மதம் மற்றும் கலாச்சார உறவுகளும் மிக பழமை வாய்ந்தது.

    இதனை மேற்கொண்டு வலுப்படுத்த ராமாயண பாதை தொடர்புள்ள திட்டங்களை விரிவுபடுத்த நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    நேபாளம்
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரதமர் மோடி

    2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி இந்தியா
    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    இந்தியா

    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  கொரோனா
    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  மணிப்பூர்
    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! ஜியோ
    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025