NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
    இந்தியா

    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

    எழுதியவர் Nivetha P
    June 01, 2023 | 08:06 pm 1 நிமிட வாசிப்பு
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு

    இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அதன்படி அவர் பிரதமர் மோடியினை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒன்றாக இணைந்து இன்று(ஜூன்.,1) பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டின் பிரதமர்களும் கூட்டாக இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர். இந்த ரயிலானது பீகாரில் உள்ள பத்னாஹாவில் இருந்து நேபாளத்தில் உள்ள கஸ்டம் யார்டுக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது.

    இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் - மோடி 

    இதனையடுத்து இருவர் முன்னிலையில் இரு நாட்டுக்கு இடையேயான ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள் நடந்தது. பின்னர் இது குறித்து மோடி பத்திரிகையாளர்கள் முன் பேசுகையில், போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று(ஜூன்.,1) கையெழுத்திடப்பட்டு உள்ளது. இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா-நேபாளம் இடையில் நீண்ட காலத்திற்கான மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரக்கூடியது. இரு நாடுகள் இடையில் மதம் மற்றும் கலாச்சார உறவுகளும் மிக பழமை வாய்ந்தது. இதனை மேற்கொண்டு வலுப்படுத்த ராமாயண பாதை தொடர்புள்ள திட்டங்களை விரிவுபடுத்த நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரதமர் மோடி
    நேபாளம்
    இந்தியா

    பிரதமர் மோடி

     9 ஆண்டுகால ஆட்சி நிறைவு: பிரதமர் மோடி ட்வீட் இந்தியா
    அசாம் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி அசாம்
    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  இந்தியா
    புதிய நாடாளுமன்றம் எப்படி இருக்கும்: வெளியிடப்பட்ட முதல் வீடியோ  இந்தியா

    நேபாளம்

    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இந்தியா
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்! கிரிக்கெட்
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! ராஜஸ்தான்
    10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!  இந்தியா

    இந்தியா

    NCERT பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்ட தலைப்புகளின் விவரங்கள்  பள்ளி மாணவர்கள்
    சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் தடகள போட்டி
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? டிசிஎஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023