NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி 
    சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.

    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 04, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருக்கும் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒருபுறம் ஆன்மீக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன. அதே நேரத்தில் இந்தியா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது... இன்று இந்தியா உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது." என்று பேசியுள்ளார்.

    பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

    பிரதமர் மோடி மேலும் இன்று பேசியதாவது:

    இந்த மாநாட்டு மையத்தின் படங்களை நான் பார்த்தேன். இது ஆன்மீக மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளின் மையமாக இருக்கும்.

    உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் இங்கு வருவார்கள். மேலும் இந்த மையம் நாட்டின் இளைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

    இன்று இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பங்களிப்புடன் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    துறவிகளை நம் நாட்டில் பெரும்பாலும் ஓடும் நீர் என்று வர்ணிக்கிறார்கள். ஏனென்றால் துறவிகள் ஒருபோதும் தங்கள் எண்ணங்களோடு நின்றுவிடுவதில்லை, அவர்கள் செயல்களோடும் நிறுத்திவிடுவதில்லை. தொடர் ஓட்டமும், தொடர் முயற்சியும்தான் மகான்களின் வாழ்க்கை. என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    மோடி
    நரேந்திர மோடி
    இந்தியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பிரதமர் மோடி

    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு இந்தியா
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா
    பிபர்ஜாய் புயல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்  இந்தியா
    சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது  சென்னை

    மோடி

    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    10 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி  இந்தியா
    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்! பிரதமர் மோடி
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    நரேந்திர மோடி

    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்  இந்தியா

    இந்தியா

    இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு ! அமெரிக்கா
    கல்வித்துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை விதித்தது பீகார் அரசு பீகார்
    முதல்முறையாக ஏடிபி டூர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் வீரர் யூகி பாம்ப்ரி டென்னிஸ்
    ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025