NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
    நவம்பர் 2021இல், பாகிஸ்தானுக்கு புதுடெல்லி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் நிராகரித்தது.

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023
    03:10 pm

    செய்தி முன்னோட்டம்

    மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் இருக்கும் அமைச்சரின் அலுவலகம் இன்னும் இது குறித்து முடிவெடுக்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அழைப்பைப் பெற்றுக்கொண்டார் என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    ஒரு மாதத்திற்கு முன்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறிய கருத்துக்கள் இந்தியாவில் பெரும் எதிர்ப்பைப் பெற்றது.

    பிலாவல் சர்தாரியின் கருத்து "நாகரீகமற்றது" என்று இந்திய விமர்சகர்கள் கூறினார்கள்.

    சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் குயின் கேங்கிற்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியா

    12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் இந்தியா வருவாரா?

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால், பிலாவல் பூட்டோ சர்தாரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பார்.

    நவம்பர் 2021இல், ஆப்கானிஸ்தான் தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்திற்கு பாகிஸ்தானை புதுடெல்லி அழைத்திருந்தது.

    அப்போது, ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளில் இந்தியா எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான், இந்த அழைப்பை நிராகரித்தது.

    "கெடுக்கும் ஒருவரால் அமைதியை ஏற்படுத்த முடியாது" என்று பாகிஸ்தானின் அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் சென்னை
    தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு இந்தியா
    குடியரசு தின விழா கொண்டாட்டம் - எகிப்து அதிபர் வருகை மோடி
    மனித எலும்புகளை உண்ண சொல்லி மருமகளை வற்புறுத்திய குடும்பம்: வழக்கு பதிவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025