NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
    இந்தியா

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023, 03:10 pm 1 நிமிட வாசிப்பு
    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
    நவம்பர் 2021இல், பாகிஸ்தானுக்கு புதுடெல்லி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் நிராகரித்தது.

    மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இருக்கும் அமைச்சரின் அலுவலகம் இன்னும் இது குறித்து முடிவெடுக்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அழைப்பைப் பெற்றுக்கொண்டார் என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறிய கருத்துக்கள் இந்தியாவில் பெரும் எதிர்ப்பைப் பெற்றது. பிலாவல் சர்தாரியின் கருத்து "நாகரீகமற்றது" என்று இந்திய விமர்சகர்கள் கூறினார்கள். சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் குயின் கேங்கிற்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் இந்தியா வருவாரா?

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால், பிலாவல் பூட்டோ சர்தாரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பார். நவம்பர் 2021இல், ஆப்கானிஸ்தான் தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்திற்கு பாகிஸ்தானை புதுடெல்லி அழைத்திருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளில் இந்தியா எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான், இந்த அழைப்பை நிராகரித்தது. "கெடுக்கும் ஒருவரால் அமைதியை ஏற்படுத்த முடியாது" என்று பாகிஸ்தானின் அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் கூறியிருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ ராஜஸ்தான்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் இந்திய அணி

    இந்தியா

    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை மோடி
    அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம் வணிக செய்தி
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நிது கங்காஸ் இந்திய அணி
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா

    பாகிஸ்தான்

    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் இம்ரான் கான்
    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான் தாலிபான்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023