NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை
    காஷ்மீரின் சிறப்பு சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும்: பாக். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்

    பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை

    எழுதியவர் Sindhuja SM
    Jan 18, 2023
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், "காஷ்மீர் போன்ற தீவிரமான பிரச்சனைகள்" குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் "நேர்மையான பேச்சுவார்த்தைக்கு" அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பிறகு ஏற்பட்ட "துன்பம், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம்" கற்று தந்த பாடத்தை தனது நாடு கற்றுக்கொண்டதாகவும், அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

    துபாயின் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷெரீப், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர UAE ஆட்சியாளர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உதவியை நாடினார்.

    பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களின் இருதரப்பு பிரச்சினைகளை, குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் முக்கிய பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    இந்தியா

    பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாவது:

    "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் காஷ்மீரில் நடப்பதை நிறுத்த வேண்டும். காஷ்மீரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள சிறுபான்மையினர் மிகவும் தவறாக நடத்தப்படுகிறார்கள்.

    அந்த பிராந்தியத்திற்கு அமைதியை கொண்டு வர வேண்டும். இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார்." என்று தெரிவித்திருக்கிறார்.

    அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆனால், ஆகஸ்ட் 5, 2019அன்று இந்தியா செய்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்யாமல், பேச்சுவார்த்தை சாத்தியமில்லை." என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரின் சிறப்பு சலுகைகள்(சட்டப்பிரிவு 370) அந்த தேதியில் தான் இந்திய அரசால் நீக்கப்பட்டது. இந்த சிறப்பு சலுகைகளை மீண்டும் காஷ்மீருக்கு வழங்கினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தமுடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது வானிலை அறிக்கை
    உத்திரகாண்ட் மாநிலம் - ராணுவ கட்டிடங்களில் விரிசல் என தலைமை தளபதி மனோஜ் பாண்டே தகவல் இந்தியா
    தும்பிக்கை இழந்த யானை குட்டியால் மக்கள் சோகம் இந்தியா
    முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார் மோடி

    உலகம்

    மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: ஜனவரி 1 முதல் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொரோனா
    ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருடம் சிறை தண்டனையை நீடித்த ராணுவ அரசு! உலகம்
    சர்ச்சைக்குள்ளான இருமல் மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தம்! இந்தியா
    பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்? வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025