Page Loader
பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு

பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2025
12:39 pm

செய்தி முன்னோட்டம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற நாட்டின் வலுவான செய்தியை உலக அரங்கில் வலுப்படுத்த அரசு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அமைத்துள்ளது. மத்திய அரசின் ராணுவ பதிலடியைப் பாராட்டியதற்காக தனது கட்சியினரின் சமீபத்திய விமர்சனங்கள் இருந்தபோதிலும், காங்கிரஸ் எம்பி சசி தரூர், இந்த முக்கிய ராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக பிரதிநிதிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளதோடு, ஒரு குழுவிற்கும் தலைமை தாங்க உள்ளார். முன்னதாக, ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட பதிலடிக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள்

குழுக்களை தலைமை தாங்கும் எம்பிக்கள் 

கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எம்பிக்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுக்குச் செல்லும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார். "மிக முக்கியமான தருணங்களில், இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது." என்று கிரண் ரிஜிஜு கூறினார். சசி தரூரைத் தவிர, திமுகவின் கனிமொழி, என்சிபி (சரத் பவார்)யின் சுப்ரியா சுலே மற்றும் பாஜகவின் ரவி சங்கர் பிரசாத், பைஜயந்த் பாண்டா ஜேடியு, ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமார் ஜா மற்றும் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மற்ற குழுக்களின் தலைவர்களாக உள்ளனர். இதற்கிடையே குழுக்களில் சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத் மற்றும் அசாதுதீன் ஒவைசி போன்ற மூத்த அரசியல்வாதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் எக்ஸ் தள பதிவு