NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம்
    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவம் ரோந்து சென்றனர்

    நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, எல்லையில் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்கின இந்திய மற்றும் சீன ராணுவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 01, 2024
    11:03 am

    செய்தி முன்னோட்டம்

    நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

    2020இல் நடந்த ஒரு பெரிய மோதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இது மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

    முன்னதாக, கடந்த வாரம் எட்டப்பட்ட ராணுவ அமைதி ஒப்பந்தத்தின்படி, வியாழன் (அக்டோபர் 31) அன்று டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்து பணி தொடங்கியது.

    வீரர்கள் குறைப்பு செயல்முறை புதன்கிழமை நிறைவடைந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    இந்த செயல்முறை இரு படைகளும் கூட்டாக தங்கள் துருப்புக்களை திரும்பப் பெறுவதை சரிபார்ப்பது மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை அகற்றுவதை உள்ளடக்கியது ஆகும்.

    இராஜதந்திர பேச்சுக்கள்

    புதிய ரோந்து ஒப்பந்தத்தை மோடி, ஜின்பிங் ஒப்புக்கொண்டனர்

    குறிப்பிடத்தக்க வகையில், அக்டோபர் 23 அன்று, ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

    இரு தலைவர்களும் கிழக்கு லடாக்கில் எல்ஏசியில் புதிய ரோந்து ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டனர் மற்றும் பிராந்திய அமைதிக்கு நிலையான இருதரப்பு உறவுகளின் அவசியத்தை வலியுறுத்தினர்.

    வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவும் சீனாவும் எல்ஏசியில் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்கும் என்று அறிவித்திருந்தார்.

    இது எல்லையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருந்தாலும், அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக அர்த்தம் இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

    கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்தில் எதிர்கால விவாதங்கள் டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் வெற்றிகரமான ரோந்துக்குப் பிறகு கால்வான் போன்ற இடையக மண்டலங்களில் ரோந்துப்பணியை மீண்டும் தொடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா-சீனா மோதல்
    இந்தியா
    சீனா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா

    இந்தியா

    தொடரை இழந்தாலும், இரண்டாவது போட்டியில் வலுவான ஜெர்மனியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி இந்திய ஹாக்கி அணி
    கனடா இந்தியாவை 'முதுகில் குத்தியது': கனடாவால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் குற்றசாட்டு கனடா
    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி நரேந்திர மோடி
    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு என்ஐஏ

    சீனா

    2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள் உலகம்
    பறவைகளாக மாறிய சீன மாணவர்கள்; வெளியான வினோதமான காரணம் வாழ்க்கை
    நிலவின் மாதிரிகளுடன் வெற்றிகரமாக பூமிக்கு தரையிறங்கிய சீனாவின் Chang'e-6  நிலவு ஆராய்ச்சி
    உலகின் முதல் கார்பன் ஃபைபர் பயணிகள் ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது ரயில்கள்

    இந்திய ராணுவம்

    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு உத்தரகாண்ட்
    ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா இந்தியா
    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு  இந்தியா
    YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025