LOADING...
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு; மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டம்
பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு; மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 13, 2025
06:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், தங்களுக்கு இடையேயான பதட்டமான உறவுகளைச் சீரமைப்பதற்கான லட்சியமான புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளன. கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ராஜதந்திர ரீதியாகப் பாதிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளைச் சீராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரின் கொலையைச் சுற்றியிருந்த சர்ச்சையால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2023 இல் இந்திய உளவுத்த்துறைக்கு இந்தக் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியதை அடுத்து, கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஆவார்.

பேச்சுவார்த்தை

வர்த்தகம் மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க திட்டம்

புதிய செயல் திட்டம், உறவுகளை நிலைநிறுத்துவதிலும், முக்கியமான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இரு வெளிவிவகார அமைச்சர்களும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, விவசாயம், முக்கிய கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைத் தீவிரமாகப் பின்தொடரத் திட்டமிட்டுள்ளனர். இது, சமீப மாதங்களில் பல உயர் மட்ட பாதுகாப்பு மற்றும் அமைச்சர்கள் கூட்டங்களைத் தொடர்ந்து வந்துள்ளது. மோடி மற்றும் ஆனந்த் ஆகியோர், சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான உரையாடல்களைப் பராமரிக்கும் அதே வேளையில், பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதித்தனர்.