NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
    அடுத்த செய்திக் கட்டுரை
    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
    நேர்காணலில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா.

    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா

    எழுதியவர் Srinath r
    Nov 28, 2023
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், வேறுபாடுகளை மறந்து இந்தியா- கனடா ஒன்றிணைய வேண்டும் எனவும், இந்தியா வணிக உறவுகளுக்கு இன்னும் தயாராக உள்ளதாகவும், கனடாவை இந்தியாவிற்கு வணிக பிரதிநிதிகளை அனுப்புமாறு வலியுறுத்தினார்.

    டொராண்டோவில் டிஏஜி தொலைக்காட்சிக்காக கனடிய பத்திரிகையாளர் தாஹிர் கோராவுடனான நேர்காணலில்,

    "இந்தியா குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான தகவல்களை மட்டுமே கேட்கிறது, அதனால் நாங்கள் உங்களுக்கு உதவமுடியும்" என்றார்.

    ௨ந்ட card

    வர்த்தகம் குறித்து பேசிய இந்திய தூதர்

    தொடர்ந்து பேசியவர், கனடாவிடம் இந்தியா தெரிவித்து வரும் கவலைகளை கனடா புரிந்து கொண்டாலும், அவற்றை போக்குவதற்கான வேலைகளை கனடா செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும் வர்த்தகம் குறித்து பேசியவர், வர்த்தகம் என்பது இரு நாடுகளை ஒன்றிணைக்கும் எனவும், இந்தோ-கனடிய சமூகம் மற்றும் பரந்த கனேடிய சமூகத்தில் உள்ளவர்கள்,

    பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியாவின் புதுமையான வளர்ச்சியைப் பயக்கும் வகையில் வர்த்தகம் செய்ய பரிந்துரைத்தார்.

    அதேபோல், பரஸ்பர கவலைகளை புரிந்து கொள்ளாமல், எந்த ஒரு சர்வதேச உறவும் உறுதியானதாக இருக்க முடியாது என, அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ௩ர்ட கார்டு

    இந்தியா கனடா உறவில் ஏற்பட்ட விரிசல்

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி, கனடாவில் உள்ள ஒரு குருத்வாராவிற்கு வெளியே காலிஸ்தான் பிரிவினைவாதியும், இந்திய அரசால் தேடப்படும் நபருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலைக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான, நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த இந்தியா, இதை "அபத்தமானது" மற்றும் "உள்நோக்கம் உடையது" எனக் கூறியிருந்தது. மேலும், இது குறித்த ஆதாரங்களையும் கேட்டு வந்தது.

    இந்த விவகாரம் இரு நாட்டு உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்த, இரு நாடுகளும் பரஸ்பரம் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    தூதரகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா
    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியா
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இந்தியா

    இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் டெஸ்லா டெஸ்லா
    சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா? நிமோனியா
    சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு மருத்துவம்
    LSG அணியின் மென்டாராக இணையும் ராகுல் டிராவிட்? கிரிக்கெட்

    தூதரகம்

    தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர் சிங்கப்பூர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    ஆஸ்திரேலியா: இந்திய மாணவரை கொடூரமாக தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  ஆஸ்திரேலியா
    கனடாவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்  கனடா
    சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து கனடா
    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025