NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

    நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 12, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த மாதம் நடந்த ராணுவ புரட்சியால் நைஜரில் தற்போது வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு நிலையற்ற தன்மை நிலவுவதால் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றியுள்ளன.

    இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 250 பேர் நைஜரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அத்தியாவசியமற்ற பணியில் உள்ளவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், அங்குள்ள இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும், எந்தவொரு அவசர உதவிக்கும் தூதரகத்தை +227 9975 9975 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

    niger military coup background

    நைஜரில் நான்காவது முறையாக இராணுவ புரட்சி

    நைஜரின் அதிபராக இருந்த மொஹமட் பாஸூம் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கடந்த ஜூலை 26 அன்று அவரை வீட்டுக் காவலில் வைத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானி அதிகாரத்தை கைப்பற்றினார்.

    ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நைஜர் முழுவதும் வன்முறை வெடித்தது.

    அண்டை நாடுகளான மாலி, கினியா, சாட் மற்றும் புர்கினா பாசோவைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குள் ராணுவ புரட்சியை கண்ட ஐந்தாவது ஆப்பிரிக்க நாடு நைஜர் ஆகும்.

    மேலும், 1960ல் நைஜர் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் நடந்த நான்காவது ஆட்சிக்கவிழ்ப்பு இதுவாகும்.

    ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகிய நாடுகள் ராணுவ ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    ஆப்பிரிக்கா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மத்திய அரசு

    நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு இந்தியா
    ஊழியர்களுக்கு 4% வரை அகவிலைப்படியை உயர்த்தப் பரிசீலனை செய்யும் மத்திய அரசு இந்தியா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்றம்
    விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல்  மணிப்பூர்

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025