NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்
    இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்புத்துறையில் புதிய மைல்கல்

    இனி இந்திய ராணுவ விமானங்கள் பசிபிக் வரை எளிதாக பறக்கலாம்; ஆஸ்திரேலியாவுடன் கையெழுத்தானது புதிய ஒப்பந்தம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 21, 2024
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) மற்றும் இந்தியாவின் ஆயுதப் படைகளுக்கு இடையே ஆகாயத்தில் இருந்து வான்வழி எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளை அனுமதிக்கும் புதிய ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளன.

    ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொழில்துறை அமைச்சர் பாட் கான்ராய் எம்.பி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் இருதரப்பு விவாதங்களின் முடிவில் இது அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏற்பாடு இரு நாடுகளின் விமானப்படைகளின் இயங்குநிலையை மேம்படுத்துகிறது. அவற்றின் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துகிறது.

    இந்த ஏற்பாட்டின் கீழ், ஆஸ்திரேலியாவின் KC-30A மல்டி-ரோல் டேங்கர் போக்குவரத்து விமானம், இந்திய ராணுவ விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பி, அவற்றின் செயல்பாட்டு வரம்பை நீட்டித்து, வெகு தொலைவிற்கு பயணங்களை மேற்கொள்ள உதவும்.

    பாதுகாப்புத்துறை 

    பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு

    இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

    மேலும், இந்தோ-பசிபிக் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட கடமைகளை வலியுறுத்துகிறது.

    RAAF துணைத் தலைவர் ஏர் வைஸ்-மார்ஷல் ஹார்வி ரெனால்ட்ஸ் இந்த முயற்சியை வரவேற்று, நம்பிக்கையை வளர்ப்பதிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இது ஒரு முன்னோடியாக இருக்கும் எனக் கூறினார்.

    இந்த ஒப்பந்தம் விமானப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அறிவு, நிபுணத்துவம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் ஒன்றாக வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

    இத்தகைய ஒத்துழைப்புகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் செயல்பாட்டு வரம்பு மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்திரேலியா
    பாதுகாப்பு துறை
    விமானப்படை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    இந்தியர்கள் காப்புரிமை தாக்கல் செய்வது அதிகரிப்பு; முதல்முறையாக டாப் 10 பட்டியலில் இணைந்தது இந்தியா காப்புரிமை
    உலக நன்மைக்காகவே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா; அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கருத்து உலகம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல் ஆர்பிஐ
    இந்தியாவில் அதிகரித்து வரும் வாட்ஸ்அப் ஹேக்கிங் வழக்குகள்; தப்பிப்பது எப்படி? வாட்ஸ்அப்

    ஆஸ்திரேலியா

    குடியேறுபவர்களை குறைக்கவும், மாணவர் விசா விதிகளை கடுமையாக்கவும் ஆஸ்திரேலியா திட்டம் விசா
    பொதுமக்களுடன் நீந்திய வைரல் திமிங்கலம் ஆஸ்திரேலிய கடற்கரையில் இறந்தது உலகம்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள் புத்தாண்டு 2024

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு இந்தியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025