NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
    அறுவை சிகிச்சைக்குப்பின் போது குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது.

    கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Aug 06, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம், கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை, இன்று(ஆகஸ்ட் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்தது அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது.

    தொடர்ந்து ராமநாதபுரத்திலிருந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை.

    குழந்தைக்கு, சென்னை அரசு மருத்துவமனையில், மூளையில் ஏற்படும் நீர் கசிவை உறிஞ்ச, VP shunt என்ற மருத்துவக்கருவி பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட VP shunt, வெளியே வந்துவிட்டதால், அதை அகற்றிவிட்டு மீண்டும் புதிதாக VP shunt பொருத்தப்பட்டது.

    அதற்காக நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் போது குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது.

    ஜேக்ள்

    மருத்துவமனை மீது குற்றம் சாட்டிய குழந்தையின் பெற்றோர்

    அந்த உறைவை நீக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், ரத்த உறைவு வலது கை முழுவதும் பரவியதால், கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

    தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த செய்தியின் தொடர்ச்சியாக முறையான விசாரணை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் அறிவித்தார்.

    குழந்தையின் அகற்றப்பட்டதற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    விசாரணையில் மருத்துவமனையின் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது.

    இந்நிலையில், தற்போது ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை இன்று உயிரிழந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ராமநாதபுரம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சென்னை

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    மகளிர் உரிமை தொகை திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு  மு.க ஸ்டாலின்
    நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்  விஜய்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025